Ramanathapuram

News March 13, 2025

சகதிக்குள் சிக்கிக்கொண்ட அரசுப் பேருந்து

image

ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினத்திற்கு 4 ‘இ’ வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ் கூரி சாத்த அய்யனார் கோயில் பகுதிக்கு வந்தது. டிப்போவில் இருந்து வந்ததால் பயணிகள் இல்லை. அப்போது பின்னால் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ரோட்டை விட்டு கீழே இறங்கிய போது சகதிக்குள் முன் பக்க சக்கரம் சிக்கிக்கொண்டது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மீட்பு வாகனம் மூலம் அரசு டவுன் பஸ்சை மீட்டனர்.

News March 12, 2025

மண்டபம் மீனவர்கள் 2 நாள் கடலுக்கு செல்லத் தடை

image

நாளை மார்ச்.14 மற்றும் நாளை மறுநாள் மார்ச்.15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழா பாதுகாப்பு கருதி மண்டபம் தென் பகுதி விசைப் படகுகளுக்கு நாளையும், மண்டபம் வட பகுதி விசைப் படகுகளுக்கு நாளை மறுநாளும் மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்படாது என மண்டபம் மீன்வளம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News March 12, 2025

தொண்டி கடல் பகுதியில் மர்ம படகு

image

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள எம்.ஆர். பட்டினம் கடற்கரை பகுதியில் நேற்று (மார்ச்.11) இரவு மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்று படகை கைப்பற்றி விசாரணை செய்ததில் படகில் இருந்தவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

News March 12, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு

image

நேற்று 11 /3/2025 இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலாடி தாலுகா வாலி நோக்கம் பகுதியில் 39.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்ததாக கடலாடி பகுதியில் 33மி.மீ மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக மண்டபம் பகுதியில் 0.8மி.மீ மழை பதிவாகியுள்ளது.

News March 12, 2025

இராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இராம்நாடு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு. *ஷேர் செய்து பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்*

News March 12, 2025

மார்ச்.14 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச்.14 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு நடக்கிறது. மாவட்ட இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடக்கிறது. இதில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தேர்வு செய்யலாம். 10ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ படித்த வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்கலாம். *ஷேர் செய்து பிறரும் பயன்பெற உதவுங்கள்*

News March 11, 2025

இராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,இன்று இரவு 10 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட்.

News March 11, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை பெய்த மழையின் அளவு இராம்நாடு 23 மில்லி மீட்டர், மண்டபம் 12.80 மில்லி மீட்டர், இராமேஸ்வரம் 16 மில்லி மீட்டர், பாம்பன் 12 மில்லி மீட்டர், தங்கச்சிமடம் 18 மில்லி மீட்டர், பல்லமோர்குளம் 4 மில்லி மீட்டர், திருவாடானை 5.60 மில்லி மீட்டர், தொண்டி 1.80 மில்லி மீட்டர், வட்டாணம் 2.20 மில்லி மீட்டர், மழை பதிவாகியுள்ளது.

News March 11, 2025

ராமநாதபுரம்: கனமழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க

image

ராமநாதபுரத்தில் மிக கனமழை பாதிப்புகள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்கும் பொருட்டு பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும். கட்டணமில்லா உதவி எண்:1077, தொலைபேசி எண்:04567- 230060, எண்ணிலும் தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். *குழந்தைகளை பாதுக்காப்பாக கவனித்துக்கொள்ள அறிவுறுத்தல்* கட்டாயம் ஷேர்

News March 11, 2025

மீனவர்களுக்கு நிவாரண உயர்வுடன், அபாரதமும் உயர்வு

image

தமிழக அரசு மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தியது. இச்செயல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தமிழக அரசு ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது எனக் கூறி, அபராதத் தொகையை உயர்த்துமாறு இலங்கை மீனவர்கள் போராட்டம் செய்தனர். இதன் எதிரொலியாக இதுவரை ரூ.50 ஆயிரம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த அபராதம், மார்ச்.7ல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தலா ரூ. 2.50 லட்சம் அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!