India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆப்பனூர் கிராமத்தில் விவசாயி முனியாண்டி விவசாய பண்ணை தோட்டத்தில் பயிரிடப்பட்ட முருங்கை மரத்தில் காய்த்துள்ள முருங்கைக்காய் ஒன்று வினோதமான முறையில் நல்ல பாம்பு வடிவிலான முருங்கைக்காய் வைத்து வளர்ந்தது இதனை ஆர்வமுடன் கண்டு ரசித்த விவசாயி குடும்பத்தினர் அந்த முருங்கைக்காயை கையால் பறித்து காண்பித்து புகைப்படம் எடுத்து எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். *ஷேர் பண்ணுங்க
ராமநாதபுரம், அபிராமம் அருகே பாப்பணம் கிராமத்தில் எந்தவொரு வீட்டிற்கும் கதவுகளே இல்லை என்றால் நம்பமுடிகிறதா?. ஆம், இவர்களின் குலத்தெய்வமான முனியப்பசாமி கோவிலுக்கு தங்கத்தில் கதவு வைக்க முடியாத காரணத்தினால், கதவு இல்லாமல் இருக்கிறது. கோவிலுக்கு கதவு இல்லாததால் தங்களது வீடுகளிலும் கதவு வைக்காமல் உள்ளனர். ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஊரில் இதுவரை திருட்டும் நடைபெற வில்லையாம். புது தகவல்னா ஷேர் பண்ணுங்க
இன்று (மார்ச்.24) பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரை பகல் நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். பகல் நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
இராமநாதபுரம் போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள் சார்பில் இப்தார் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் உசேன், கௌரவ தலைவர் அருளாடும் பெருமாள், மாவட்ட செயலாளர் செய்யது ராசிக், பொருளாளர் முத்துக்குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக ஏர்வாடி காவல் ஆய்வாளர் திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் நான் முதல்வன் பினிஸிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் தொழிலக பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு சேர்க்கைக்கு மார்ச்.31 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்காலத்தில் ஒருமுறை மட்டும் மானியமாக ரூ.6000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் https: pminternship.mcg.gov.in என்ற வலைதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ராமநாதபுரத்தில் கோடை வெயிலால் அடிக்கடி நீராதாரங்களை மக்கள் தேடும் நிலையில் சாலையோரங்களில் தற்காலிகமாக தண்ணீர் பழம், கரும்புச்சாறு, இளநீர், சர்பத் கடைகள் தோற்றியுள்ளன. திறந்தவெளியில் இவை விற்பனை செய்யப்படுவதால் மணல் துகள்கள்,துாசிகள் படிவது,அதிகளவில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கும் நிலையும் உள்ளது. எனவே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இதில் ஆய்வு செய்து தரமான குளிர்பானங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் மார்ச்.22 அன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர். படகில் இருந்த 7 மீனவர்களையும் அவர்கள் விசாரித்து ராமேஸ்வரம் திரும்பிச் செல்லும் படி எச்சரித்து அனுப்பினர். அதன் பின் அவர்கள் இந்திய எல்லைகுள் மீன்களை பிடித்து நேற்று கரை திரும்பினர். இது குறித்து மீனவர்கள் மீன்வளத்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை.
இன்று (மார்ச்.23) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு பண்டம் தொதல். இது இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. தேங்காய்ப்பால்,பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இது சரும அழகினை மேம்படுத்தும். முன்னர் விசேஷ காலங்களில் மட்டுமே செய்யப்பட்ட தொதல் தற்பொழுது ஆண்டு முழுவதும் கிடைக்கும் பண்டமாக மாறி உள்ளது.கீழக்கரை,பனைக்குளம் பகுதிகளில் தயாரிக்கும் தொதல் மிகவும் பிரபலமானவை.Share.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சி பொது நிதி ரூபாய் 1.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 14 கடைகள் கொண்ட பூக்கடை வளாகத்தை இன்று அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி,அதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி,நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர் மன்ற உறுப்பினர் வடமலையான் சிறப்பாக செய்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.