Ramanathapuram

News June 20, 2024

மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

image

தென்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 35 – 45 கி.மீ. வேகத்திலும், இடையில் 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன்.23 வரை 4 நாள்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் (ராமேஸ்வரம்) தெரிவித்துள்ளார்.

News June 19, 2024

காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

image

நாடு முழுவதும் இன்று ராகுல் காந்தி எம்பி-யின் 54வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் பிறந்தநாளை தேவிபட்டினம் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வட்டார தலைவர் காருகுடி சேகர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் வட்டார துணை தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 18, 2024

இராமநாதபுரத்தில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு

image

இராமநாதபுரத்தில் அரசு அலுவலகங்கள், வங்கிகள்,  மற்றும் பொதுமக்கள் பலர் பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களாக பி.எஸ்.என்.எல்
நெட்ஒர்க் சேவை இடையிடையே துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அலைபேசியில் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ளமுடியாமல் சிரமடைந்து வந்தனர். இந்நிலையில் பி.எஸ்.என்.எல் இணைய சேவை இன்றும் பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

News June 18, 2024

வேலை வாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், 10ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, முதுகலை பட்டம் பெற்ற வேலைநாடுநர்கள் பங்கேற்று தங்கள் தகுதிக்கேற்ற வேலையை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். 

News June 18, 2024

4 தமிழக மீனவர்களுக்கு சிறை – இலங்கை நீதிமன்றம்

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி, ஜூலை 2 ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், 4 தமிழக மீனவர்களையும் இலங்கை போலீஸார்  யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

News June 18, 2024

மாவட்டத்தின் முதல் வட்டார கல்வி அலுவலர் ! குவியும் வாழ்த்துகள்

image

திருவாடானை தாலுகா பதனக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் அமுதா.இவர் பதிவு மூப்பு அடிப்படையில் வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.மேலும் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் இவர் ஒருவர் மட்டுமே வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News June 18, 2024

அரியமான் கடற்கரை திருவிழா நிறைவு விழா

image

இராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரை திருவிழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

News June 17, 2024

இந்தியா கூட்டணி கட்சியினருக்கு விருந்து அளித்த எம்.பி.

image

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.பி.யான நவாஸ் கனி இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு தனது சொந்த ஊரான குருவாடி கிராமத்தில் விருந்து அளித்தார். இதில் ராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதி டி.கே.குமார் கலந்து கொண்டு நவாஸ் கனி வாழ்த்து தெரிவித்தார். இந்த விருந்தில் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

News June 17, 2024

ராம்நாடு: 3 நாளுக்கு பின் மீட்கப்பட்ட மீனவர் உடல்

image

மண்டபம் வடக்கு கடல் பகுதியிலிருந்து ஜூன் 14ல் தொழிலுக்குச் சென்ற விசைப்படகின் அடிப்பாகம் உடைந்து நடுக்கடலில் படகு மூழ்கியது. இதில் 2 மீனவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீனவர் இருவரின் உடல்கள் ஜூன் 15ல் மீட்கப்பட்டது.
இப்படகில் சென்று மாயமான பாம்பன் மீனவர் கலீல் ரஹ்மானை மரைன் போலீசார் தேடி வந்தனர். மூழ்கிய படகின் உள்பகுதியில் சிக்கி உயிரிழந்த கலீல்
ரஹ்மான் உடல் இன்று (ஜூன் 17) மீட்கப்பட்டது.

News June 17, 2024

ராமநாதபுரம்: பக்ரீத் சிறப்பு தொழுகை

image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் நாகநாதபுரம் வசந்தம் மகால் வளாகத்தில் உள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதில் மாநில துணை செயலாளர் அன்வர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!