Ramanathapuram

News April 7, 2025

இரவு நேர ரோந்து பணி அதிகாரிகளின் விபரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர் இன்று (ஏப்ரல் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் . இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

News April 6, 2025

பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் பழுது

image

ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பால தூக்குப் பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் தற்போது பழுதாகி இருப்பதாக வெளி வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குத்து பாலம் ஒரு பக்கம் தூக்கியும், இன்னொரு பக்கம் இறக்கமாக இருந்ததால் அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 6, 2025

ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

image

பாம்பன் ரயில் புதிய செங்குத்து பாலத்தை இன்று திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அனுராதாபுரம் விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாம்பம் வந்தார். பின்னர் பாம்பன் பாலத்தை திறந்து வைத்த மோடி தற்போது ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

News April 6, 2025

உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழாவில் 42 பவுன் திருட்டு

image

உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி சமேத மங்களநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கோயிலில் நான்கு ரத வீதிகள் மற்றும் தரிசனத்திற்காக நின்ற கோவை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 8 பெண்களிடம் கொள்ளையர்கள் 42 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.கழுத்தில் இருந்த செயின் திருடு போனதை அறிந்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் வரிசையாக புகார் அளித்தனர்.

News April 5, 2025

பாம்பன் திறப்பு – பிரதமர் ட்வீட்

image

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நாளை ஏப்.6ஆம் தேதி ராம நவமி நாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் அடிக்கல் நாட்டப்படும்” என பதிவிட்டுள்ளார்.

News April 5, 2025

ராமேஸ்வரத்திற்கு நாளை முதல் தினசரி விரைவு ரயில் இயக்கம்

image

ராமநாதபுரத்திற்கு நாளை (ஏப்ரல்.06) முதல் சென்னை தாம்பரத்திலிருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்துக்கு 16103/04 TBM RMM தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து தினசரி மாலை 6.10 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரத்திலிருந்து தினசரி மாலை 4 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே தென் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை 4000 போலீசார் பாதுகாப்பு

image

பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைத்து புதிய ரயில் போக்குவரத்தையும் துவக்குகிறார். இதற்காக இலங்கையிலிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நாளை காலை 11:50 மணிக்கு வந்திறங்குகிறார்.பின் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 4000 போலீசார் ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

News April 4, 2025

ராமநாதபுரத்தில் நேற்று பெய்த மழையின் அளவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.03) காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இராம்நாடு 08 மில்லி மீட்டர், மண்டபம் 14 மில்லி மீட்டர், இராமேஸ்வரம் 25.10 மில்லி மீட்டர், பாம்பன் 20.60 மில்லி மீட்டர், தங்கச்சிமடம் 83.20 மில்லி மீட்டர், திருவாடானை 21.20 மில்லி மீட்டர், தொண்டி 2.60 மில்லி மீட்டர், ஆர்.எஸ் மங்கலம் 40.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News April 4, 2025

ராமநாதபுரம் மக்களே தயாரா… சென்னைக்கு புதிய ரயில்

image

சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இரண்டு தினசரி ரயில் சேவைகள் இயங்குகிறது. இந்நிலையில் மூன்றாவதாக சென்னைக்கு ஒரு புதிய இரவு ரயில் சேவை அறிமுகமாகிறது. பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வண்டி எண்: 16103/16104 தாம்பரம்-ராமேஸ்வரம் சேவையை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. இன்று இந்த வண்டிக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. மக்களே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.

News April 4, 2025

பாம்பன் பாலம் திறப்பு விழா அழைப்பிதழ்

image

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாம்பன் இணைப்பு இரயில்வே பாலம் ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி திறக்க உள்ளார். அதன் அழைப்பிதழ் போக்குவரத்து அமைச்சகத்தால  வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.உங்க ஊர் பெருமையா நீங்கதான் சொல்லணும். #SHARE ALL

error: Content is protected !!