India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டு உள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
முதுகுளத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரவேல் (50) இவர் கடந்த 1ம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு நிவாரணம் பெற கடந்த 3 நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காளான் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து அரசு நிதியை சித்திரவேல் மனைவி சுமதியிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
கமுதி அருகே வீரமச்சான்பட்டி கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழந்தது. பரசுராமன் என்பவர் 200 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு, பட்டியில் அடைத்து வைத்திருந்தபோது 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், 25 செம்மறி ஆடுகளை கடித்து கொன்றது. கால்நடை மருத்துவர்கள் உடற்ஆய்வு கூறு செய்தனர். பாதிக்கப்பட்டவர், நிவாரணம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு நாட்டுப்படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 29ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் வழக்கு இன்று புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 9 பேருக்கும் வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார்.
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் பயணிகள் அமரும் நிழற்குடையில் 70 வயது மதிக்கத்தக்க பெயர் முகவரி தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த போலீசார், உடலை மீட்டு காவலர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைகு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தவர். மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர் <
எமனேஸ்வரம், துறைமுகம் (ராமேஸ்வரம்), பாம்பன், திருப்புல்லாணி, திருஉத்திரகோச மங்கை, பேரையூர், இளம்செம்பூர், எஸ்பி பட்டினம் சார்பு ஆய்வாளர் காவல் நிலையங்கள், ஆய்வாளர் காவல் நிலையங்களாக தர நிலை உயர்த்தி கவர்னர் உத்தரம்படி அரசின் கூடுதல் தலைமை செயல தீரஜ்குமார் நேற்று ( 04.8.2025) அரசாணை பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் அரசு நிலத்தில் வசிப்போர் (அ) நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் (அ) வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
வைகை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், தற்போது விநாடிக்கு ஆயிரத்து 594 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் 69 அடியை எட்டிவிடும். இந்நிலையில் 3ஆம் கட்ட அபாய எச்சரிக்கைக்குப் பிறகு எந்நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட வைகை கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.