Ramanathapuram

News June 25, 2024

ராம்நாடு: திமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

image

பரமக்குடி எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் மேகலா (25). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 2வது கணவர் மணிகண்டன் போதையில் ஜூன் 23ல் கொலை செய்தார். இந்நிலையில் நேற்று எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை, அதிமுக, திமுக, பாஜக, விசிக, காங், மக்கள் நீதி மய்யம், சிபிஎம், சிபிஐ, ஓபிஎஸ் அணி, இந்து முன்னணி உட்பட அனைத்து கட்சியினர் கலந்துகொண்டு 2 குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் வழங்குமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News June 25, 2024

மாணாக்கரின் கல்வித்திறன்: ராம்நாடு கலெக்டர் ஆய்வு

image

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் நாரணமங்கலம் துவக்கப்பள்ளியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று (ஜூன் 24) ஆய்வு செய்தார். அங்கு கல்வித்திறன் தொடர்பாக மாணவ, மாணவியர், ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். தாசில்தார் சாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, முருகானந்தவள்ளி, நாரணமங்கலம் ஊராட்சி தலைவர் காளிமுத்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News June 25, 2024

ராம்நாடு: பிரபல நடிகர் மீதான வழக்கு ஒத்தி வைப்பு

image

தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை வரும் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News June 24, 2024

காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு தடை

image

மன்னார் வளைகுடா கடலில் நாளை (ஜூன் 25 ) காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிமீ வரை, அதிகபட்சம் 65 கிமீ வரை வீசக்கூடும். இதனால் மண்டபம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அனுமதி சீட்டு வழங்கப்படமாட்டாது என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர்
சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

தரையில் அமர்ந்து குறைகேட்ட கலெக்டர்

image

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சியில் இன்று (24.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் நேரில் சென்று தரையில் அமர்ந்து பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நியாயவிலை கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம், சாலை வசதிகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

News June 24, 2024

கலெக்டர் அலுவலகம் முன்பு அதிமுக ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன்பு அதிமுக சார்பில் இன்று (ஜூன் 24) ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலர் முனியசாமி தலைமை வகித்தார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில மகளிரணி இணைச் செயலர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

News June 23, 2024

22 மீனவர்களுக்கு ஜூலை 5 வரை சிறை

image

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 3 விசைப்படகு, 22 மீனவரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக
இலங்கை கடற்படை இன்று காலை சிறை பிடித்தது. இவர்கள் யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவுப்படி
22 மீனவர்களையும்
ஜூலை 5 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News June 23, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை 3 விசைப்படகுடன் இலங்கை கடற்படை இன்று அதிகாலை சிறை பிடித்துச் சென்றது. இது தொடர்பாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இலங்கை கடற்படை கைது செய்த 22 மீனவர்களை
உடனடியாக விடுதலை செய்யக்கோரி நாளை வேலைநிறுத்தம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. போராட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர் பங்கேற்க உள்ளனர்.

News June 23, 2024

இராமநாதபுரத்தில் 131 மிமீ மழை பொழிவு பதிவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி
திருவாடானை 54.20,
தொண்டி 39.20,
வட்டாணம் 17.80,
தீர்த்தாண்ட தானம் 15.40, கடலாடி 4.40 மிமீ என மாவட்டம் முழுவதும்
131 மிமீ மழை பெய்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

News June 22, 2024

2 ஆண்டுகளில் ரூ.17.24 கோடி கடனுதவி

image

ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடந்த 2022 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை அரசின் நலத்திட்டங்களின் கீழ் ரூ.7.93 கோடி மானியத்துடன் ரூ.30.05 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில் 50 இளையோருக்கு ரூ.17 கோடியே 24 லட்சத்து 16 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. இதில் ரூ.4 கோடியே 31 லட்சத்து 4 ஆயிரம் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!