Ramanathapuram

News March 18, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (மார்ச்.17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 17, 2025

நூற்றாண்டு கடந்த பாம்பன் கலங்கரை விளக்கம்

image

பாம்பனில் 1846ம் ஆண்டு ஐரோப்பியர்களால் 100 அடி உயர நேவல் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்திற்கு பிறகு கலங்கரை விளக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 33 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டு மீண்டும் பொதுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ரூ.10 கட்டணத்தில் பூங்காவுடன் இயங்கும் நேவல் கலங்கரை விளக்கம் குழந்தைகளுடன் பொழுதினை கழிக்க ஏற்ற இடமாக அமையும். *ஷேர் பண்ணுங்க

News March 17, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.17) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 17, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

ராமநாதபுரத்தில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.

News March 17, 2025

கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

image

தொண்டி அருகே நம்புதாளையில் ராட்டினம் அமைத்த பகுதியில் கடந்தாண்டு நவ.1 அன்று பட்டப்பகலில் திருமணத்தை மீறிய உறவு காரணமாக சரவணன் உள்ளிட்டோர் கார் மற்றும் டூவீலர்களில் சென்று முத்துக்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதில்  சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த கலைசெல்வனை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் இருந்த அவரை நேற்று தொண்டி போலீசார் கைது செய்தனர்.

News March 17, 2025

ரத்தினக்கல் வழிப்பறி செய்த 7 பேர் கைது

image

மதுரை மாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை முனியசாமி நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஜன.24 அன்று கீழக்கரை வந்த இவரிடம் காரில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் முனியசாமியை மிரட்டி ரூ.60 லட்சம் மதிப்புள்ள ரத்தினக்கல்லை பறித்துச் சென்றனர். இதில் 7 பேரை போலீசார் கைது செய்து ரத்தினக்கல்லை பத்திரமாக மீட்டனர்.

News March 16, 2025

 இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (மார். 16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை  ரோந்து பணியில் ஈடுபடும் அதுகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  பொது மக்கள் இரவு நேரங்களில் அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

அண்ணனும் தம்பியும் ஒரே கருவறையில்

image

ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் விநாயகரும் முருகனும் இணைந்து ஒரே கருவறையில் காட்சியளிக்கின்றனர். தெய்வங்கள் இருவரையும் ஒரே சந்நிதியில் தரிசிப்பது பெரும் வரம். சொத்துவழக்குப் பிரச்னைகள், குடும்பச் சிக்கல்கள், உறவு பிரச்னைகள், சகோதர, சகோதரிகளிடையே உருவாகும் சண்டைகள் நீங்க இங்கு வேண்டிக் கொள்கின்றனர். சனீஸ்வரரின் அன்னை சாயாவின் அம்சம் நிறைந்த தலவிருட்சம் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.

News March 16, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.16) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 16, 2025

வழிவிடு முருகன் கோவில் 85 ஆம் ஆண்டு உத்திர பெருவிழா

image

இராமநாதபுரம் அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோவில் 85 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் திருவிழா
11/04/25 வெள்ளிகிழமை பங்குனி வழிவிடு முருகனுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அன்று இரவு 7 மணிக்கு மேல் பூக்குழி வைபவம் நடைபெறும். 12.04.25 சனிக்கிழமை அன்று வழிவிடு முருகன் திருவீதி உலா நடைபெறும். *ஷேர்

error: Content is protected !!