Ramanathapuram

News August 8, 2025

பாம்பன் பகுதி மீனவர்களுக்கு 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்ட ஒரு படகையும் அதிலிருந்து பத்து மீனவர்களையும் இலங்கை நீர்கொழும்பு அருகே உள்ள வெளிச்சரா நீதிமன்றத்தில் இலங்கை கடற்படையினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, வழக்கு விசாரித்த நீதிபதி மீனவர்கள் 10 பேரையும் வரும் ஆக. 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

News August 8, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஆகஸ்ட் 7) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News August 7, 2025

ராம்நாடு: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

image

ராமநாதபுரம் இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <>இங்கே கிளிக் <<>>செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 7, 2025

ராம்நாடு: கூட்டுறவு வங்கியில் வேலை.. உடனே APPLY

image

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 32 (17+15) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் www.drbramnad.net என்ற தளத்திற்கு சென்று ஆக. 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யப்வும். ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 7, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை நடைபெறும் இடங்கள்

image

பரமக்குடி சுந்தரராஜ பவனத்தில் பரமக்குடி நகராட்சி 14,15 வார்டுகள், மண்டபம், பேரூராட்சி திருமண மண்டபத்தில் 10 – 18 வார்டுகள், மேலப்பார்த்திபனூர், சமுதாயக்கூடம், நம்பதாளை புயல் காப்பகம், பாண்டியூர் சமுதாயக்கூடம், பெரியபட்டிணம் சமுதாயக்கூடம், ஆகிய இடங்களில்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆக. 8) நடைபெற உள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம்

image

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். தென்கடல் பகுதியில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி 10 மீனவர்களை கைது செய்தனர். இதைக் கண்டித்து, மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்யக் கோரி, பாம்பன் மீனவர்கள் இன்று, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News August 7, 2025

ராமநாதபுரம்: 10th படித்திருந்தால்.. ரயில்வே வேலை

image

ராமநாதபுரம் மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.19,900 – ரூ.29,200 வரை வழங்கப்படும். கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News August 7, 2025

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் வேலை

image

இராமநாதபுரம் கூட்டுறவு துறையின் இயங்கும் சங்கங்கள் (ம) வங்கிகளில் உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் 32 பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, (ஆகஸ்ட் 6) முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. மாவட்ட கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் நடைபெறும். இதனை www.drbramnad.net என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News August 7, 2025

ராமநாதபுரம்: இந்தியன் வங்கியில் வேலை..இன்று கடைசி நாள்..APPLY

image

ராமநாதபுரம் மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்து உதவவும்*

News August 7, 2025

மீனவர்களுக்கு ஆகஸ்ட் 11 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

image

தொண்டி அருகே திருப்பாலைக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள், கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று (ஆகஸ்ட்.06) யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளால் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களை ஆகஸ்ட் 11 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!