India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பினர். இதில் ஒரு விசைப்படகில் 3 கூரல் மீன்கள் சிக்கின. இந்த 3 மீன்கள் 40 கிலோ இருந்தது. இம்மீனை வாங்க நாகையில் இருந்து சில மீன் வியாபாரிகள் வந்தனர். இதனை பாம்பன் கடற்கரையில் ஏலம் விட்டதில் ஒரு கிலோ ரூ.5400 வீதம் ரூ. 2.16 லட்சத்திற்கு நாகை மீன் வியாபாரி விலைக்கு வாங்கினார். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேவிபட்டினம் கடலில் கருடன் வானத்தில் வட்டமிடும், கடலில் எலுமிச்சை பழம் மிதந்து வரும் அந்த இடத்தில் எனது உருவம் உள்ளது என கனவில் முருகன் தெரிவித்ததாக ஒருவர் கூற, அதன்படி மக்கள் சென்று பார்த்தபோது அவ்வாறு நிகழ்ந்துள்ளது. கடலில் 12 அடியில் முருகன் உருவம் பொறித்த வேல் ஒன்று கிடைத்துள்ளது. இது தான் இன்றைய பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில். இங்கு சென்றால் உடல் காயங்கள் குணமாகும் என்பது நம்பிக்கை *ஷேர்
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விபர பட்டியல் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை மற்றும் திருவாடானை பகுதிகளில் இன்று (ஏப்.9) நண்பகல் 2மணி முதல் மாலை 4 மணி வரை ரோந்து அதிகாரிகள் மற்றும் அலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண்கள் 83000 31100 (அ) 100ஐ அணுகவும்.
▶️சித்திரை கார் என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். ராமநாதபுரம், திருப்புல்லாணியில் ஏக்கருக்கு சுமார் 1000கி வரையில் மகசூல் கொடுப்பதாக கருதப்படுகிறது.
▶️இராமநாதபுரம் குண்டு மிளகாய் என்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்மையாக திருவாடானை, முதுகுளத்தூர், கடலாடி, இராஜசிங்கமங்கலம், கமுதி வட்டங்களில் விளைகிறது. *ஷேர் பண்ணுங்க
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.9) காற்றின் வேகம் 06 கிலோமீட்டர்/மணி முதல் 20 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒர் பட்டபடிப்பு படித்த 20 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்<
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி உப்புத் தண்ணீர் தீவு அருகே நேற்று முன்தினம் விரிக்கப்பட்ட வலையில் 100 கிலோ ‘ஆலிவர் ட்ரீ’ என்ற இனத்தை சார்ந்த பெண் ஆமை சிக்கியது. பைபர் நாட்டுப்படகில் சென்ற ஒப்பிலான் ஒத்தப்பனையைச் சேர்ந்த மீனவர் சுகன் ரவி (35), இதைப் பார்த்தார். ஆமையின் துடுப்பு பகுதியில் சுற்றிக்கொண்ட வலையை நுணுக்கமாகப் பிரித்து ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டார்.மீனவரை வனச்சரகர் பாராட்டினார்.
இன்று (ஏப்ரல்.08) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விபர பட்டியல் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர் கடலாடி, கீழக்கரை மற்றும் திருவாடானை பகுதிகளில் இன்று (ஏப்ரல் 8) நண்பகல் 2மணி முதல் மாலை 4 மணி வரை ரோந்து அதிகாரிகள் மற்றும் அலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண்கள் 83000 31100(அ) 100ஐ அணுகவும்.
இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் கூட்டமைப்பினர் இன்று (ஏப்.08) சென்னையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் சந்தித்து மீனவ பெருமக்களின் நல்வாழ்விற்காக ரூ.576.73 கோடி செலவில் பல்வேறு புதிய திட்டங்கள் தந்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.