India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை சுதீர்லால் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த அக்.23 மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் காவல் நிறைவடைந்ததை அடுத்து ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்கு வரும் (நவ.20) வரை காவல் நீட்டித்து ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த குடும்பத்தினர் காவல் நீட்டிப்பையடுத்து அதிர்ச்சியடைந்தனர்.
தொண்டி: நம்புதாளையில் நவ.1-ம் தேதி அன்று தீபாவளியையொட்டி ராட்டினம் அமைத்து பொருட்காட்சி நடத்தி வந்த பரமக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார்(29) ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொண்டி போலீசார் சிவகங்கை பெருமசேரி சரவணன் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதில் தொடர்புடைய திருவாடானை பாண்டி செல்வம்(21). சிவகங்கை விக்னேஷ்(22) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரக்கோட்டை, தேர்த்தங்கல், மேல-கீழ செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இரைத்தேடி வருகின்றன. பருவமழை பெய்து வருவதால் தேர்த்தங்கல் சரணாலயத்தில் தண்ணீர் உள்ளது. இதனால் வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத்துவங்கியுள்ளன. மாவட்டத்தில் இங்கேதான் அதிக பறவைகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(நவ.,07) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவி வரும் சூழலில் ராம்நாடு உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.
தமிழக முன்னாள் உள்துறை செயலாளர், முன்னாள் மாநில தேர்தல் ஆணையர், ராமநாதபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் ராஜ்யசபா உறுப்பிராக இருந்த டாக்டர் மலைச்சாமி(87) ஐ.ஏ.எஸ் அவர்கள் நேற்று(நவம்பர் 6) காலமானார். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது உடல் இன்று அண்ணா நகர் ஆர்.டி.ஒ அருகில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(நவ.6) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் மீனவ இளைஞர்களுக்கு இந்தியகடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையில் சேர்வதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொண்டி, தேவிபட்டினம் கடலோர பாதுகாப்பு குழும கடற்கரை காவல் நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நடந்து வரும் நிலையில், சமீபகாலமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி,விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை எழுந்துள்ளது, தற்போது வானிலை மையம் நாளை (நவ.7) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது. மக்கள் தங்களது பணிகளை முன்னேற்பாடு செய்து கொள்ளவும்
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் & கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை(நவ.7) மாலை 5.45 மணிக்குள் <
Sorry, no posts matched your criteria.