India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெற்கு ரயில்வே சார்பில் மண்டபம் ரயில் நிலைய பயணிகள் நலக்குழு ஆலோசனை கூட்டம் இன்று (அக்.19)நடைபெற்றது. இதில் பயணச்சீட்டு முன்பதிவு வசதி வேண்டும், ரயில்வே நிலைய முகப்பை தேசிய நெடுஞ்சாலை பக்கமாக மாற்றிட வேண்டும். பயணிகள் நடந்து செல்ல நடைமேடை அமைத்திட வேண்டும். அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், அடிப்படை வசதிகள் மேம்படுத்திட வேண்டும் என மண்டபம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் (அக்.19)இந்த ஆண்டு 1300 டன் கருப்பட்டி ரூ.28 கோடி மதிப்புக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கருப்பட்டியை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்தால் பனைத் தொழிலாளர் வாழ்வாதாரம் மேம்படும் என ராமநாதபுரம் மாவட்ட பனைத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 2018 கணக்கின்படி சுமார் 2.50 கோடி பன மரங்கள் உள்ளதாகவும், இராமநாதபுரத்தில் 15 லட்சம் பண மரங்கள் உள்ளன.
இராமநாதபுரம், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த (செப்.28) அன்று மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் காவல் (அக்.10) நிறைவடைந்த நிலையில் அபதாரம் விதித்து விடுதலை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று(அக்.18) சென்னை விமான நிலையம் வருகை தந்தனர். அவர்களை இராமேஸ்வரம் மீனவர்கள் சங்க தலைவர்கள் வரவேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இந்நிலையில் இன்று (அக்.18) மாதாந்திர குறைதீர் கூட்டமானது ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் விவசாயிகளிடம் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து மனுக்களை அளித்துச் சென்றனர்.
ராமநாதபுரம் தொண்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறன் கொண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் அளவீட்டு முகாம் இன்று(அக்.18) நடைபெற்றது. இதில் முட நீக்கியல் மனநலம் காது மூக்கு தொண்டை கண் மருத்துவர்கள் மாணவர்களுக்கு பரிசோதனை செய்து உபகரணங்கள் தேவை குறித்து வழிகாட்டினர். 78 மாணவர் மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதுகலை பட்டம் பயின்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் தங்களது அசல் மற்றும் ஜெராக்ஸ் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10 மணி அளவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதுகலை பட்டம் பயின்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் தங்களது அசல் மற்றும் ஜெராக்ஸ் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர் புளியங்குடியைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன்(24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 2021இல் திருமணம் செய்வதாக கூறி கர்ப்பம் ஆக்கினார். சிறுமியின் தந்தை புகாரின்படி முதுகுளத்தூர் போலீசார் போக்சோ வழக்கில் கோகுல கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மகிளா கோர்ட் நீதிபதி கோபிநாத் மேற்கண்ட கோகுல கண்ணனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
தேவர் ஜெயந்தி விழாவுக்கு செல்லும் வாகனங்களுக்கு ஒரு வாரம் முன்பே பாஸ் வழங்கக் கோரி மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கமுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் தொடர்ந்த வழக்கில் டிஜிபி, ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் எஸ்.பி. பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(அக்.17) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.