Pudukkottai

News March 16, 2025

புதுக்கோட்டை: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 16, 2025

40 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய வழக்கில் தீர்ப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் மூட்டம்பட்டியில் 1984-85ஆம் ஆண்டில் குளத்தில் கலிங்கு அமைத்ததில் ரூ.1.51 லட்சம் கையாடல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதியப்பட்டது. இதில் பொதுப்பணி துறையில் பணியாற்றிய பிரபாகரன், தங்கரத்தினம் இருவரும் இறந்து விட்டதால் உயிருடன் உள்ள நடராஜனுக்கு (83) இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

News March 15, 2025

தக்காளி விலை வீழ்ச்சி கிலோ 7-க்கு விற்பனை

image

முக்கண்ணாமலைப்பட்டி வார சந்தையில் தக்காளி கிலோ 
ரூ 7-க்கும் 3-கிலோ ரூ.20க்கும் விற்பனையானது கடந்த சில மாதங்களாக தக்காளி கிலோ 40 வரை விற்பனையானது தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் நாட்டு கத்திரிக்காய்-60 வெண்டைக்காய்-30, பீர்க்கங்காய்-40, புடலங்காய்-30, மிளகாய்-30, முள்ளங்கி-20, சவ்சவ்-20, முட்டைகோஸ்-20, கோவக்காய்-30, பீட்ரூட்-30, கேரட்-40, உருளைக்கிழங்கு-40, பாவற்காய்-40, விற்பனையானது

News March 15, 2025

40 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய வழக்கில் தீர்ப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் மூட்டம்பட்டியில் 1984-85ஆம் ஆண்டில் குளத்தில் கலிங்க் வெட்டியதில் ரூ.1.51 லட்சம் கையாடல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதியப்பட்டது. இதில் பொதுப்பணி துறையில் பணியாற்றிய பிரபாகரன், தங்கரத்தினம் இருவரும் இறந்து விட்டதால் உயிருடன் உள்ள நடராஜனுக்கு (83) இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

News March 15, 2025

தொகுதி மறு சீரமைப்பு கூட்டாட்சி :  சிதம்பரம் கேள்வி

image

ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்கு பின் எம்பி ப.சிதம்பரம் கூறியதாவது, தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்துக்கு 39 இடங்களில் 8 இடங்கள் குறைக்கப்பட்டு 31ஆக மாறும். அதனால் ஓரிரு தொகுதிகள் கொண்ட மாநிலங்களுக்கு மக்களவையில் எப்படி மரியாதை இல்லையோ அது போன்ற நிலை நமக்கு ஏற்படும். தமிழகம் உள்பட தென் மாநிலங்களின் குரல் மக்களவையில் ஒடுக்கப்படும். அது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது” என்றார்.

News March 15, 2025

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா வரும் மார்ச்.16ஆம் தேதி ஞாயிறு பூச்சொரிதல் விழாவும், மார்ச்.17ஆம் தேதி அக்னி காவடியும், மார்ச்.23ஆம் தேதி காப்புக்கட்டுதல் தொடங்கி மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சியும் ஏப்ரல் 6, 7, 8 ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் விழாவும், ஏப்ரல்.7 ஆம் தேதி நாடுவருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அம்மன் அருள் பெற SHARE பண்ணுங்க..

News March 15, 2025

முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர்நாள் கூட்ட ம்

image

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் 18ஆம் தேதி மாலை 3:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்திருக்கும் கூட்ட அரங்கில் நடைபெறும். எனவே, புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் விதவையர்கள் படை வீரர்கள் சார்ந்தோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது குறைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம்.

News March 15, 2025

தொடர் கதையாகும் மான் உயிரிழப்பு!

image

கீரனூர் அடுத்த பொன்மாரி கல்லூரி அருகில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புள்ளிமான் அடிபட்டு இறந்துள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கடி வெளியே வரும்போது, வாகனங்கள் மோதி அடிபட்டு இறப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் காட்டுப்பகுதிக்குள் ஆங்காங்கே தண்ணீர் வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 15, 2025

மாவட்ட வன்கொடுமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் 

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழக அரசு ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

News March 14, 2025

புதுக்கோட்டையில் பட்ஜெட் கொண்டாட்டம்

image

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக 1820 கோடி நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்து, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத் அலி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி முன்பாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

error: Content is protected !!