Pudukkottai

News August 16, 2024

புதுகையில் 1 லட்சம் பரிசு அறிவிப்பு

image

வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 10000, 5000, 2500 ரூபாய் பரிசுத் தொகை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் சார்பில் வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் வாராப்பூர் ஊராட்சி பகுதியில் இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ருபாய் 100000 வழங்குவேன் என்றார்.

News August 16, 2024

புதுகை சிப்காட் பகுதிகளில் மின்தடை

image

புதுகை சிப்காட் துணைமின் நிலையத்தில் நாளை (ஆக 17) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிப்காட்நகர், தொழிற்பேட்டை, தாவூதுமில், சிட்கோ, வாகவாசல், வடவாளம், புத்தாம்பூர், செட்டியாப்பட்டி, பாலன்நகர், அபிராமிநகர், பெரியார்நகர், ராம்நகர், ஜீவாநகர், சிட்கோ (தஞ்சை சாலை) உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எஸ்.கண்ணன் தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

புதுகையில் 1 லட்சம் பரிசு அறிவிப்பு

image

வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 10000, 5000, 2500 ரூபாய் பரிசுத் தொகை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் சார்பில் வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் வாராப்பூர் ஊராட்சி பகுதியில் இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ருபாய் 100000 வழங்குவேன் என்றார்.

News August 15, 2024

புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

News August 15, 2024

சவுக்கு சங்கர் மீதான வழக்கு ஏற்க முடியாது

image

புதுக்கோட்டையில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடுவது ஏற்க முடியாதது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அரசியல் தொடர்பான கொலையாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆளூநர் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவர் அளிக்கும் தேனீர் விருந்து கலந்து கொள்ளவில்லை” என விளக்கம் அளித்தார்.

News August 15, 2024

அழைப்பு விடுத்த புதுக்கோட்டை கலெக்டர்

image

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டு, சிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News August 15, 2024

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி

image

திமுக சார்பாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில் மாணவ, மாணவர்களுக்கான பேச்சு போட்டி மாவட்டம் தோறும் திமுக இளைஞரணி சார்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் சனிக்கிழமை காலை புதுகை மாலையிடு கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

News August 15, 2024

எம்.பி. ஜோதிமணியின் சுற்றுப்பயண விவரம் வெளியீடு

image

கரூர் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியத்தில் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். தொடர்ந்து இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வருகின்ற 16ஆம் தேதி அன்னவாசல் ஒன்றியத்தில் எம்.பி. ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

News August 15, 2024

நாளை தேசிய கொடியை ஏற்றுகிறார் முதல் பெண் மேயர்

image

புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயர் திலகவதி செந்தில் நாளை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு தேசிய கொடியை ஏற்றி சிறப்பிக்க இருக்கிறார். நாடு முழுவதும் நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மன்னர் ஆண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் பெண் மேயராக பதவி ஏற்றுள்ள திலகவதி செந்தில் நாளை கொடி ஏற்றுகிறார்.

News August 14, 2024

புதுக்கோட்டை அரசு வழக்கறிஞர் பேரில் போலி முகநூல்

image

புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் வெங்கடேசன் திமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இவருடைய முகநூலை போலியாக கணக்கு துவங்கியுள்ளனர். இதனை அறிந்த வெங்கடேசன் இந்த போலி முகநூல் பக்கத்தை யாரும் நம்ப வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!