Pudukkottai

News October 23, 2024

அரசுத் திட்டம் தெய்வத்தின் பெயரிலேயே செய்யப்படும் வினோதம்

image

திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கியது. மன்னர் ராமச்சந்திர தொண்டமான் காலத்தில் 1839-1886 எல்லா அரசு காரியங்களும் ஸ்ரீ பிரகதாம்பாள் பேரிலேயே செய்யப்பட்டன. ஆரம்ப காலத்தில் ஆட்சி செய்த தொண்டமான் மன்னர்கள் ஸ்ரீ ரங்கநாதரின் பெயரிலேயே ஒப்பந்தங்களையும் மூச்சலிக்கைளையும் நிறைவேற்றி கையொப்பமிட்டனர். ஸ்ரீரங்கநாதர் என்பது திருமயத்தில் உள்ள அனந்தசயன மூர்த்தியாகும். “காலச்சுவடு”

News October 23, 2024

புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம்

image

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி பிரகாதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த  முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த 18 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். SHAREIT

News October 23, 2024

புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் ரயில் ரத்து

image

வங்கக் கடலில் உருவாகும் தானா புயல் ஒடிசா மேற்குவங்க மாநிலம் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து ஒடிசாவிற்கு இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் நெல்லை- ஷாலிமார் சிறப்பு ரயில், புவனேஸ்வரில் இருந்து வரும் ராமேஸ்வரம் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 23, 2024

திருமயத்தைச் சேர்ந்த 12 பேர் மாநில போட்டிக்குத் தேர்வு

image

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பயிற்றுனர் அப்துல் காதர் பயிற்றுவித்த திருமயம் மாணவர்கள், 12 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை பெற்றுள்ளனர். முதலிடம் பிடித்தவர்கள் 12 பேரும் மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க வருகின்றனர். ஷேர் செய்யவும்

News October 22, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடியுடன் மழை

image

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,புதுக்கோட்டை மாநகர், திருக்கோகர்ணம், ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி ஆகிய பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.

News October 21, 2024

புதுக்கோட்டையில் உள்ள மிகப்பெரிய குதிரை சிலை

image

பழங்காலத் தமிழர்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. பெருங்கரையடி மீண்ட அய்யனார் கோவில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இது ஆலங்குடி தாலுகாவில் குலமங்கலத்தில் அமைந்துள்ளது. இதன் குதிரை சிலை 33 அடி உயரம் கொண்டது, முன் கால்கள் காற்றிலும் மற்றவை நிலத்திலும் உள்ளன. சிலை தெற்கு நோக்கி உள்ளது.

News October 21, 2024

மணமேல்குடியில் இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்

image

மணமேல்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இளநிலை உதவியாளர் மதன் பணியிட நீக்கம். கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கியதில் ரூ.5.89லட்சம் பணத்தை முறைகேடாக அவரது வங்கி கணக்கில் வரவு வைத்தது கண்டறியப்பட்டது தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News October 21, 2024

புதுக்கோட்டையில் இன்று குறைதீர் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் முகாம் இன்று (21.10.2024) திங்கள் கிழமை நடைபெற உள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் அடிப்படை தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 20, 2024

புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமான பட்டாசுகள் மிகக்குறைந்த விலையில் காவலர் திருமண மண்டபத்தில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு புதுக்கோட்டை காவல்துறை சார்பாக அறிவிக்கப்படுகிறது. இடம் : காவலர் திருமண மண்டபம், ஆயுதப்படை வளாகம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை

News October 20, 2024

திருச்சிக்கு நடந்தே சென்ற புதுக்கோட்டை மக்கள்

image

பொது போக்குவரத்து வாகனங்கள் இல்லாத அந்த நாளில் புதுக்கோட்டை மக்கள் கால்நடையாகவே பல்வேறு ஊர்களுக்கு சென்றனர். திருச்சிக்கு கால்நடையாக செல்லும் பயணிகள் தங்கி இளைப்பார ரெங்கம்மா சத்திரம், அம்மா சத்திரம், நல்லூர், மாத்தூர் போன்ற இடங்களில் தொண்டமான் மன்னர்கள் சத்திரங்களை கட்டியிருந்தனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இன்னும் இந்த சத்திரங்களை காணலாம். “காலச்சுவடு”. ஷேர் செய்யவும்….

error: Content is protected !!