India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திற னாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரகமதுல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை விரிவுபடுத்திய முதலமைச்சருக்கு அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
08.02.1900 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இது 30 வினாடி தொடர்ந்து இருந்தது, ஆனால் அழிவுகள் ஏதும் ஏற்படவில்லை. 26.12.2004 தமிழகத்தை சுனாமி தாக்கிய பொழுது, புதுக்கோட்டை அருகே குடுமியான்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாறை குளங்களில் லேசாக அதிர்ந்தது, ஆனால் அது நிலநடுக்கம் இல்லை என பின்னர் தெரிய வந்தது.
பொன்னமராவதியை சேர்ந்த இளங்கதிர் இளங்கோவன் உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024ஆம் ஆண்டுக்கான போட்டியில் உலகதரவரிசையில் 14ஆவது இடத்தை பெற்றுள்ளார். இத்தாலி நாட்டில் ரோம்நகரில் நடந்த உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024ஆம் ஆண்டுக்கான போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி தாய்த்திரு நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்குபல்வேறு அமைப்புகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.
ஆவுடையார்கோவில் வட்டம், சிறுமருதூர், மணமேல்குடி வட்டம், நெற்குப்பை, கறம்பக்குடி வட்டம், பொன்னன்விடுதி ஆகிய கிராமங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் புதிய கட்டடங்களை, முதலமைச்சர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று காலை 10.15 மணியளவில் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
திருமயம் புகழ்பெற்ற ஸ்ரீ கோட்டை கால பைரவர் ஆலயத்தில் சுவாமி வழிபாடு பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவருடைய மூத்த மகன் பிரதீப் கோட்டை காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர் நிகழ்வின் ஓபிஎஸ் ஆதரவாளர் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கமிஷன் மண்டிகளில் இன்று எலுமிச்சை ரூ.100 முதல் 120 வரை விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டு, வியாபாரிகளுக்கு 150 வரை விற்கப்படுகிறது. கடந்த ஒரு சில தினங்களாகவே எழுமிச்சை 150 ரூபாய் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குளிர்பான கடைகளுக்கு வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்வதால் எலுமிச்சை விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
அன்னவாசல்,மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் குமார், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன், சிவா, செல்லதுரை ஆகிய 3 பேரும் நிர்மல்குமார் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது முருகேசன் கையில் வைத்திருந்த அறிவாளால் நிர்மல்குமாரை வெட்டி, அவரது தாயையும் தாக்கி சென்றுள்ளனர்.
மணப்பாறை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை இலுப்பூர் அருகே உள்ள மேலசித்தக்குடிப்பட்டியை சேர்ந்த 23 வயது வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி இரண்டு முறை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கொடுத்த புகாரின் பேரில், இலுப்பூர் ஆய்வாளர் வனிதா இன்று வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். மருந்துகளின் அளவு மற்றும் பற்றாக்குறை உள்ளதா என கேட்டறிந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 21.09.2024 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். இன்று ( 21.09.2024 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.