Pudukkottai

News November 16, 2024

விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம்

image

அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆதிதிராவிடர் நலவிடுதி காப்பாளர் நாகூர்முத்துவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர் நேற்று உத்தரவிட்டுள்ளார். ஆய்வுக்கு செல்லும்போது காப்பாளர் நாகூர் முத்து பணியில் இல்லாததால் அவரை பணியிடம் நீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

News November 16, 2024

முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்யும் முகாம் அவரவர் பகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ள  நாட்களில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளை கழக பொறுப்பாளர்கள் பொறுப்புடன் பணியாற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 15, 2024

புதுக்கோட்டையில் நாளை மின்தடை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (16.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி புதுக்கோட்டை, சித்தன்னவாசல், திருமயம், குடுமியான்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 14, 2024

கந்தர்வகோட்டை அருகே பேருந்து மோதி விபத்து

image

கந்தர்வகோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மன்னார்குடிக்கு ஜல்லிகற்கள் ஏற்றி சென்ற லாரி பழுதாகி நின்றது. அப்போது திருச்செந்தூரிலிருந்து தஞ்சை நோக்கி சென்ற அரசுப்பேருந்து எதிர்பாராவிதமாக லாரியில் மோதியது. இதில் லாரியின் கிளீனர் ஜீவா(25) அதே இடத்தில் பலியானார். பஸ்சில் காயமடைந்த பயணிகள் புதுகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலிஸார் விசாரிக்கின்றனர்.

News November 14, 2024

நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்த இருவர் பணி நீக்கம்

image

திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்ட நிதியில் முறைகேடு செய்த இளநிலை உதவியாளர் வெங்கடேஷ் குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பணியிலிருந்த வட்டாரக் கணக்கு உதவியாளர் வருண் நிரந்தரமாக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னையில் இருந்து கூடுதல் இயக்குனர் 2 நாட்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

News November 14, 2024

நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்த இருவர் பணி நீக்கம்

image

திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்ட நிதியில் முறைகேடு செய்த இளநிலை உதவியாளர் வெங்கடேஷ் குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பணியிலிருந்த வட்டாரக் கணக்கு உதவியாளர் வருண் நிரந்தரமாக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னையில் இருந்து கூடுதல் இயக்குனர் 2 நாட்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

News November 14, 2024

சிறு குறு நிறுவனங்கள் சான்றிதழ் பதிய இலவச வசதி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வேண்டிய உத்யம் பதிவு சான்றிதழை மாவட்ட தொழில் மையம் மூலமாக இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உத்யம் சான்றிதழ் மூலம் எளிதாக பெறலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 13.11.2024 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட  மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News November 13, 2024

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழகர்கள் கலைஞர்கள் சான்றோர்கள் ஆகியோர்களின் சிறந்தவர்களுக்கான 2024-2025 ஆண்டுக்கான அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதற்கு விண்ணப்பிக்க வருகின்ற 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கான விண்ணப்பத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி நாள்

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழகர்கள் கலைஞர்கள் சான்றோர்கள் ஆகியோர்களின் சிறந்தவர்களுக்கான 2024-2025 ஆண்டு திருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதற்கு விண்ணப்பிக்க வருகின்ற 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கான விண்ணப்பத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவிப்ப

error: Content is protected !!