India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த எண்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
✅இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டம் கிரனூர் அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், பெருமாளுக்கு சனிக்கிழமை அல்லது அமாவாசை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி வழிபாடு செய்தால் கண் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. இத்தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <

பொது வினியோக திட்டத்தில் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது வினியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் போன்றவைகளை மாற்றிக்கொள்ளவும். இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்

புதுகை மாவட்டத்தில் விநாயகர் சிலை செய்வோர் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்டு சிலைகளை செய்ய வேண்டும், சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிமணிகள் பூஜை பொருட்கள் பூக்கள், எல்இடி விளக்கு உள்ளவற்றை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், தெர்மாகோல், ரசாயனம் கொண்ட சாயங்கள், எண்ணை வண்ணப் பூச்சுகளை, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகளை பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்காக எண்களை பயன்படுத்தி கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுகை மாவட்டத்தில் தட்டாமலைபட்டி, கருவிடைசேரி, குருங்களூர், அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில், தற்பொழுது பருவமழை காரணமாக இந்திய பெருங்கெண்டை, கட்லா, ரோகு, மிர்கால், மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மீன் வளர்ப்பு கண்மாய், குளங்களில் அரசு விலையில் மீன் குஞ்சுகள் வளர்க்க மீன்வள சார் ஆய்வாளர்களை 8248970355, 9751616866 தொடர்பு கொள்ள கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!

கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு உடல்,நலம், சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள் நேரடியாகவும் செல்போன் பயன்படுத்துவதன் மூலமாகவும் இணையதளம் வாயிலாகவும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் இருந்து விடுபட முடியாமல் சிலர் தவறான முடிவை எடுத்து விடுகின்றனர். இது போன்ற பிரச்சனை இருந்து மாணவிகளை மீட்டு அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி நாளை தொடக்கிவைகிறார்.

புதுக்கோட்டை பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் இங்கே <
Sorry, no posts matched your criteria.