Pudukkottai

News September 30, 2024

புதுக்கோட்டை அருகே பல்லவன் ரயில் பாதி வழியில் நிறுத்தம்

image

புதுக்கோட்டை மாவட்ட எல்லையான பள்ளத்தூர்-காரைக்குடி பகுதியில் பல்லவன் ரயில் பிரேக் பழுது காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியே சென்னை நோக்கி செல்லும் ரயில் ஆகும். இதனால் புதுக்கோட்டைக்கு 6 மணிக்கு வர வேண்டிய பல்லவன் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வரும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்

News September 29, 2024

புதுகையில் 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 24 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அறுவடை நடைபெற்று வரும் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மேலும் 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

News September 29, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் 65 ரவுடிகள் கைது

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த, குற்றங்கள் நிகழாமல் தடுக்க, பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்ய, பொது அமைதியை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 65 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார்.

News September 29, 2024

இந்தியாவில் இசை கலைக்கே உயிர் மூச்சாகும் குடுமியான்மலை!

image

தமிழ்நாடு இசைக் கலைக்கு, ஏன்? இந்தியாவின் இசை கலைக்கே உயிர் மூச்சாக கருதப்படும் இசை பற்றிய கல்வெட்டு புதுகை மாவட்டம் குடுமியான் மலையில் காணப்படுகிறது. கர்நாடகா இசையின் ராகத்திற்கு “சரிகமபதநி” என்ற எழுத்து குறியீடுகளை கல்வெட்டு அறிமுகம் செய்கிறது. இங்கு காணப்படும் ராகங்கள் 7 அல்லது 8 நான் கொண்ட யாழ்- பரிவாதினி மூலம் வாசிக்கலாம் பரிவாதினி என்ற கல் வெட்டும் இங்கு உள்ளது. Way2news காலச்சுவடு தொடரும்.

News September 29, 2024

அமைச்சர் மெய்யநாதனின் இலாகா மாற்றம்

image

தமிழ்நாடு அமைச்சரவையில் 6 அமைச்சர்களுக்கு துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக இருந்த சிவ.வி. மெய்யநாதன் இலாகா மாற்றப்பட்டு தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கருத்துகளை பதிவிடவும்

News September 28, 2024

காவலரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்

image

பனையபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து மறைந்த காவலர் இளங்கோவன் குடும்பத்தினருக்கு காக்கும் கரங்கள் சார்பில் நிவாரண உதவி அளிக்கப்பட்டது. ரூ.15.98 லட்சம் பணத்திற்கான காசோலையை இளங்கோவன் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். பின்னர், உதவி செய்த சக காவலர்களுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

News September 28, 2024

மாணவர்களை பாராட்டிய கலெக்டர்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 7.5 இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ பொறியியலில் சட்டம் மற்றும் பொதுவான படிப்புகளுக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா இன்று மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை கோர்ட் ஸ்டேக்ஸ் கோப் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

News September 28, 2024

அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம்: ஆட்சியர்

image

காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் 2023-24ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம், மக்கள் திட்டமிடல் இயக்கம் போன்றவை குறித்து விவாதிக்க ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 28, 2024

15 வயதுநிரம்பியவரா? அறந்தாங்கிநகராட்சி அழைப்பு

image

குழந்தைபிறந்து 15 வருடங்கள் கழித்தும் பெயர்பதிவு செய்யப்படாதவர்களுக்காக தமிழ்நாடுபிறப்பு இறப்பு விதிகள் 2000-ல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,மேலும் ஐந்துஆண்டுகள் (01.01.2010 முதல் 31.12.2024 வரை) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக நகராட்சி அலுவலகம் சென்றுபயனடைய அறந்தாங்கி நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News September 28, 2024

குறைந்த விலையில் உப்பு வழங்கிய மன்னர்

image

புதுக்கோட்டை தனியரசு சமஸ்தானம் 175 கிராமங்களில் பூமியில் கிடைக்கும் உப்பு கலந்த தண்ணீரில் இருந்து உப்பு தயாரிக்கப்பட்டது. இதற்கு மண் உப்பு (Earth salt) என்று பெயர், கடல் நீர் உப்பை விட இது வெளுப்பாக இருக்கும், விலையும் குறைவு. 1887ல் ஒரு களம் விலை 12 அணா என்பதாகும். தமிழகத்திலேயே பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உப்பு வழங்கிய மன்னர் புதுக்கோட்டை மன்னர் தான். வே டூ நீயூஸ் காலச்சுவடு தொடரும்…

error: Content is protected !!