Pudukkottai

News October 2, 2024

“அருவ” வழிபாடு உள்ள ஒரே ஸ்தலம்

image

ஆவுடையார் கோவில் ஆத்மநாதர் சிவபெருமான் ஆலயத்தில் “அருவ” வழிபாடு நடப்பது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. உருவ வழிபாடு இல்லை மூலஸ்தானத்தில் எவ்வித சிலையும் கிடையாது. இங்கு கொடிமரம் இல்லை, பலிபீடம் இல்லை, நந்தி இல்லை மற்ற கோயில்களை போன்று போல் தீபாராதனையை பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News October 2, 2024

கீரனூரில் சோழர்கால கோயில்

image

புதுகை கீரனூர் அருகே 12 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டிய சோழர்கள், பாண்டியர்கள் விஜயநகரர்களிடமிருந்து கோவிலுக்கு நன்கொடை கிடைத்தது. இக்கோயிலில் கல்வெட்டுகள் இராஜராஜன் குலோத்துங்க சோழன்-III விஜயநகரர்களுக்கு சொந்தமானது. கல்வெட்டின்படி சிவபெருமான் உத்தமதனிச்சுரமுடைய நாயனார் என்று அழைக்கப்பட்டார். இக்கோயில் தேவஸ்தானம் மற்றும் இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது.

News October 2, 2024

எலிபேஸ்ட் சாப்பிட்டு இளம்பெண் மரணம்

image

ஆவுடையார் கோவில், இடையன்காடு, செல்வராணி மகள் வினிதா (21), கல்லேந்தல் அரசு கலைக்கல்லூரியில் பி. ஏ தமிழ் பிரிவு படித்து வந்தார். தாயிடம் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக எலி பேஸ்ட் தின்று வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். பின்னர், அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

News October 1, 2024

பாதுகாப்பு கேட்டு எஸ்பியிடம் மனு

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆயங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்பு ராஜா. அங்கு ஊராட்சி மன்ற தலைவராக உள்ள ராஜமாணிக்கத்திற்கும் இவருக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ராஜமாணிக்கம் சிறைக்கு சென்று வெளியே வந்துள்ள நிலையில் அவரால் தனக்கு தாக்குதல் ஏற்படலாம் எனக்கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.

News October 1, 2024

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்து மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் மதுபானக்கூடம் ஆகிய அனைத்திற்கும் நாளை இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி யை முன்னிட்டு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

தேசிய பெண் குழந்தைகள் விருது பெற அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு வீரதீர செயல்கள் புரிந்த தேசிய பெண் குழந்தைகள் தின விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு 04322222270 என்ற தொலைபேசி எண்ணிலும், https://awards.tn.gov.in தளத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

News October 1, 2024

குளத்து மண்ணை எடுத்து நகரத்தை உருவாக்கிய சேசையா சாஸ்திரி ‘காலச்சுவடுகள்’

image

1878 -1886 புதுகை திவான் அரசு பிரதிநிதியாக பணியாற்றியவர் சேசையா சாஸ்திரி. புதுகை மெரினா என அழைக்கப்படும் புது குளத்தில் உள்ள மண்ணை எடுத்து புதுக்கோட்டை நகரில் இன்றளவும் கம்பீரமாக நிற்கும் பல்வேறு கட்டிடங்களை கட்டச் செய்தவர். மேலும் புதுகை 4 ×4 வீதிகளை அழகுடன் வடிவமைத்தவர். மன்னர் கஜானாவை நிரப்பியவர், மக்களுக்கு எண்ணற்ற பல நன்மை செய்தவர். கேரளா திருவாங்கூர் திவானாகவும் இருந்தவர் சேசையா சாஸ்திரி.

News September 30, 2024

கலப்பட உணவுப் பொருள்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உணவு பாதுகாப்புத் துறை சார்பாக செய்யப்பட்ட நிகழ்வில் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்த உணவுகளின் தரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்வில் கலப்பட பொருள்களை கண்டறிவது குறித்து ஆட்சியர் அருணா ஆய்வு செய்தார். இன்று நடந்த நிகழ்வில் மாவட்ட உணவு கலப்பட துறை அதிகாரிகள் பங்கேறனர்.

News September 30, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலார்ட் விடுத்துள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பணியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனேக இடங்களில் மழை பெய்து என்பது குறிப்பிடத்தக்கது.

News September 30, 2024

புதுக்கோட்டை சிறையில் இலங்கை மன்னர் ‘காலச்சுவடு’

image

கண்டியை (இலங்கை) ஆண்ட கடைசி மன்னர் விக்ரம ராஜசிம்ஹோ 1816 இல் ஆங்கிலேயரால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மன்னரும் அவரது குடும்பத்தினரும் புதுக்கோட்டை சிறைக்கு கைதியாக அனுப்பப்பட்டனர். அவர்களது பரம்பரையின் பூலாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். மன்னரின் பரம்பரையினருக்கு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ராஜ மரியாதை அளிக்கப்பட்டது. சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!