Pudukkottai

News October 3, 2024

புதுகை மருத்துவக்கல்லூரி முதல்வர் மாற்றம்

image

தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி முதல்வராக கலைவாணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கலைவாணி சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். முன்னதாக புதுகை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த மணி மாற்றப்பட்டுள்ளார்.

News October 3, 2024

ஓட்டு போட இந்த தகுதி தேவை “காலச்சுவடுகள்”

image

மன்னர் ஆண்ட புதுகை சமஸ்தானத்தில் நடைபெறும் உள்ளூர் தேர்தலில் கீழ்கண்ட தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டன. அதன்படி, ஒரு தொகுதியில் 100 நாள் வசித்திருக்க வேண்டும், ரூ.10 நிலவரி செலுத்தும் நில சொந்தக்காரர், ஆண்டிற்கு ரூ.3 சொத்து வரி தொழில் வரி செலுத்துபவர், ஆண்டிற்கு 350 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள், பட்டதாரிகள், மாதம் ரூ. 25 ஓய்வூதியம் பெறுபவர்கள். இவற்றில் ஏதேனும் ஒரு தகுதி இருத்தல் வேண்டும்.

News October 3, 2024

புதுக்கோட்டை அருகே 5 பேர் கைது

image

அரிமளம், திருமயம், நமணசமுத்திரம் பகுதிகளில் 11 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் ஹரிகரன் (44), வெங்கடேஷ் (26), பாலகுமாரன் (58), சொக்கலிங்க (54), தங்கபாண்டியன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 100 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி, 4 இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளை விரைவாக கைது செய்தமைக்காக எஸ்.பி பாராட்டினர்.

News October 3, 2024

ஆலங்குடி அருகே நீரில் மூழ்கி ஒருவர் பலி

image

தெற்கு குலமங்கலம், கருவன்பட்டி, ரங்கையா மகன் சசிகுமார் 43, நேற்று காலை 6:00 மணிக்கு குடிபோதையில் பெருங்கரையடி மீண்ட அய்யனார் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்பொழுது நிலை தடுமாறி நீரில் மூழ்கி இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் காலை 10:30 மணிக்கு மீட்டனர். அவர் உடல் அறந்தாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து குலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 3, 2024

இன்றைய மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி

image

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அருகில் இயங்கி வரும் புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று(அக்.03) வியாழக்கிழமையன்று காலை 10.00 மணியளவில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அரசியல் பொதுமறைகளும் அரசு அதிகாரிகள் பங்கு பெறுவார்கள்.

News October 3, 2024

புதுக்கோட்டையில் வெற்றியாளருக்கு பரிசளிப்பு

image

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையின் சார்பில் 21ஆம் ஆண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல்திறன் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காந்திஜெயந்தி முன்னிட்டு பரிசு வழங்கும் நிகழ்வு புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்றது. ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷனா பாட்டு போட்டியில் மாவட்ட அளவில் 3ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

News October 3, 2024

புதுக்கோட்டை அருகே கிராம சபை கூட்டத்தை புறகணித்த மக்கள்

image

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபட்டினம் ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் 7 ஊராட்சிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை அம்மாபட்டினம் பொதுமக்கள் புறக்கணித்து விட்டனர்.

News October 2, 2024

குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி

image

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சிறுமருதூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (02.10.2024) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்புஉறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

News October 2, 2024

குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானியம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊதியப்பட்டியல் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். புதுகை மாவட்டத்தில் தொழில் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு சிறப்பான சேவையை தமிழக அரசு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 2, 2024

497 இடங்களில் 499 போலீசார் பாதுகாப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று 497 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதனால், 499 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆய்வாளர்கள் 20 பேர், உதவி ஆய்வாளர்கள் 123 பேர், ஆண் காவலர்கள் 196, பெண் காவலர்கள் 160 என மொத்தம் 499 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!