India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மாவட்டத்தில் நாளை (ஆக.,14) உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதுகை மாநகராட்சி 16வது வார்டு வர்த்தக சங்க கட்டிடத்திலும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வேங்கடகுளம் சமுதாய கூடத்திலும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுமாவடி பிஎம்எஸ் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. மேலும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு முல்லை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆக.13) இரவு 10 மணி முதல் நாளை(ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

79வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் எஃப் எல் ஒன், எஃப் எல் 2, எஃப் எல் 3, எப் எல் ஏ3, எஃப் எல் ஏஏ உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளுக்கும், மதுபான பார்களுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுகை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ம் தேதிக்குள் இங்கே<

புதுகை மாவட்டத்தில் கீரனூர், ஏம்பல் அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் 2025-26 நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவ மாணவியர் www.skill training.tn.gov.in இணையத்தில் விண்ணப்பித்து வரும் 31 ஆம் தேதிக்குள் சேரலாம், 8 வகுப்பு தேர்ச்சி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் பெண் இருபாலர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <

புதுக்கோட்டை என்ற பெயரின் அர்த்தம் “புதிய கோட்டை” என்பதாகும். புதுக்கோட்டை மாவட்டம் தொடக்க காலத்தில் சோழ மற்றும் பாண்டியர்களுக்கு எல்லையாக இருந்தது. பின்னர், தொண்டைமான் மன்னர்கள் இப்பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கினர். இந்நிலையில் 17ம் நூற்றாண்டில், ரகுநாத ராய தொண்டைமான் புதிய கோட்டை ஒன்றை இங்கு கட்டிய காரணமாக இதற்கு புதுக்கோட்டை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் வருகிற சுதந்திர தினத்தன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.