Pudukkottai

News December 3, 2024

சிறுவனை கடித்த தெருநாய்

image

கரம்பக்குடி சுக்கூர் மகன் 4 1/2 வயது சிறுவன் தனியார் மெட்ரிக் பள்ளியில் LKG படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது தெரு நாய் ஒன்று இவரை கன்னம், தோள்பட்டையில் கடித்துக் குதறியது. அலரல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் நாயை அடித்து விரட்டி விட்டு உடனடியாக சிறுவனை கரம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 2, 2024

புதுக்கோட்டை மாவட்ட ரோந்து பணி விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும், இரவு நேரத்தில் காவல் பாதுகாப்பு பணி குறித்த விபரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏதேனும் அசம்பாவித நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News December 2, 2024

புதுக்கோட்டை மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை முருகன் நகர், அண்ணா நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் யாரேனும் மீட்டர் பெட்டி, ட்ரான்ஸ்பார்மர், மின்கம்பங்களில் ஏறக்கூடாது என தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News December 2, 2024

விராலிமலை சாலைப்பகுதியில் 1000 புதிய மரக்கன்றுகள்

image

தமிழகமெங்கும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 340 சாலைகளில் பல்வேறுவகை மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதன்படி புதுகை – விராலிமலை, மணப்பாறை சாலையில் ஆரியக்கோன்பட்டி, திருநாடு சாலையோரப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவை விரைவில் வளர்ந்து நிழல் தரும் என்று கண்காணிப்பு பொறியாளர் செந்தில் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

News December 1, 2024

புதுகையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்நாள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, ஊரவ வளர்ச்சித் துறை சார்ந்த துறைகளின் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்ட சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

News December 1, 2024

தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நீதிக்கான பணிகளை மேற்கொண்டோர், தமிழக அரசு வழங்கும் தந்தை பெரியார் விருதுக்கான பரிந்துரை விண்ணப்பங்களை டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் தாங்கள் செய்த சமூக நீதிக்கான சாதனைகள், முழுமுகவரி, தொடர்பு எண் ஆகியவற்றுடன் ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கலாம் என கலெக்டர் மு.அருணா கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 30, 2024

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி! .

image

திருச்சி புதுக்கோட்டை மாவட்ட எல்லையான குமாரமங்கலம் எம்ஐஈடி கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே ட்ராக்கில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இன்று (நவ30) காலையில் சென்ற ரயிலில் அடிபட்டு வந்தார் காவிநிற வேட்டியும் கருப்பு கலர் துண்டும் அணிந்திருந்தார் இதை அறிந்த ரயில்வே காவல்துறையினர் இவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 30, 2024

முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

பொதுப்பெயர் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில், முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகம் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி புதுக்கோட்டையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள்  இணையதள முகவரியில் வரும் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.30) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்

News November 30, 2024

பெண்ணிடம் ஆபாச பேச்சு: ஒருவர் கைது

image

காரையூர் அருகே உள்ள காயம்பட்டியை சேர்ந்த பெண்ணிடம், கடந்த சில நாட்களாக செல்போனில் தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆபாசமாகவும், தகாத முறையில் பேசியுள்ளார். பின்னர் இதுகுறித்து அவர் காரையூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காரையூர் போலீசார் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரன்னான் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!