Pudukkottai

News October 7, 2024

கழிவறையில் கேமரா பொருத்தி ஆபாச படம்: வாலிபர் கைது

image

கந்தர்வகோட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் சலூன் கடை நடத்துபவர் மிதுன். இவர் நேற்று காலை அங்குள்ள கழிவறையில் ரகசிய கேமராவை பொருத்தி ஆபாச படங்கள் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வணிக வளாகத்தில் உரிமையாளர் நேற்று மாலை அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மிதுனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

News October 7, 2024

புதுக்கோட்டையில் 26 நெல் வகைகள்: “காலச்சுவடு”

image

புதுகை மாவட்டத்தில் 1950க்கு முன் 26 வகையான நெல் வகைகள் பயிரிடப்பட்டது. கருடன் சம்பா, ராமன் சம்பா, காரையூர் சம்பா, ராகாபும் சம்பா, பாகன் சம்பா, நெல்லூர் சம்பா, ரெங்கமன்னார், புளூதிசம்பா, மூங்கில் சம்பா, ஈக்கி சம்பா, மிளகு சம்பா, கார்த்திகை சம்பா, சீராக சம்பா, முத்து வெள்ளை, பாவமணியன் உள்ளிட்ட 26 வகையான நெல்மணிகள் பயிரிடப்பட்டுள்ளது. இவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

News October 7, 2024

கோட்டைப்பட்டினம் அருகே ஆண் சடலம் மீட்பு

image

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வாய்க்காலில் ஒருவர் இறந்த நிலையில் கிடைப்பதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 7, 2024

ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டை தானமாக வழங்கிய பெண்

image

புதுக்கோட்டை வயலோகம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டை அறநிலைத்துறையிடம் தானமாக வழங்கிய பெண்மணிக்கு அறநிலையத்துறையின் அதிகாரி முத்துராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். வீட்டை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேளாங்கண்ணி என்ற பெண் கோரிக்கை வைத்தார். கிராம மக்கள் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.

News October 7, 2024

புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 9443764621, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News October 7, 2024

ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கியது. மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர். இந்நிகழ்வில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News October 7, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

புதுக்கோட்டை, குளத்தூர், மாத்தூர், மேலத்தானியம், நகரப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (அக்.8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, கம்பன் நகர், பெரியார் நகர், மறைமலை, திருவரங்குளம், சத்தியமங்கலம், நார்த்தாமலை, புதுப்பட்டி, அரசமலை, நல்லூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

அன்னவாசல் அருகே விபத்து – 9 பேர் படுகாயம்

image

அன்னவாசலை சேர்ந்தவர் சேக்சையது இவர் ஒரு ஆட்டோவில் நேற்று முகமதுஉசேன்,
ஆமீனா பானு, ஜாஸ்மீன் ஆகியோருடன் புதுக்கோட்டை சென்றபோது  பின்னால் புதுக்கோட்டையை சேர்ந்த குணசேகரன் என்பவர் ஓட்டி வந்த  கார் ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காரில் இருந்த சித்ரா, சரவணன்,  சந்திரா, நடராஜன் மற்றும் ஆட்டோவில் சென்றவர்கள் உள்ளிட்ட 9 படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தினர்.

News October 7, 2024

அதிமுக ஆட்சி வந்தால் ரூ.2,000

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தாறு ஒன்றியசெயல் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 உரிமைத் தொகை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களால் ஆட்சியை பிடிக்க முடியாது” என அவர் தெரிவித்தார்.

News October 6, 2024

மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி

image

அன்னவாசல், சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ராப்பூசல் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பர் வீட்டு ஆட்டுக்கொட்டைகளில் கட்டியிருந்த 7 செம்மரி ஆடுகள் இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. பின்னர் தகவல் அறிந்து அங்கு சென்ற மருத்துவர் நதியா இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் ஆடுகள் குழியில் புதைக்கப்பட்டது.

error: Content is protected !!