Pudukkottai

News September 11, 2025

புதுகை: அரசு அலுவலகத்தின் வாகனம் ஏலம்!

image

புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் வரும் செப்.26-ம் தேதி காலை 10 மணிக்கு TN55 G 0379 என்ற பதிவு எண் கொண்ட மகேந்திரா பொலிரோ வாகனம் ஏலம் விடப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் செப்.24-ம் தேதி காலை 10 மணிக்கு அடையாள அட்டை, ஜிஎஸ்டி என்னுடன் ரூ.2000 முன்பணம் செலுத்தி, வாகனத்தை ஏலம் எடுத்துக் கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 11, 2025

புதுகை: நடந்து சென்றவர் மீது மோதிய பைக்

image

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அடுத்த புளிச்சங்காடு, கைகாட்டி சாலையில் சண்முகம் (78) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த சித்திரவேலு (50) என்பவர் மோதியதில், சண்முகம் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரில் வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 11, 2025

புதுக்கோட்டை மாவட்ட பேரூராட்சிகள் பட்டியல்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 8 பேரூராட்சிகள் உள்ளன அவற்றை இங்கு அறியலாம்
▶️ ஆலங்குடி
▶️ அன்னவாசல்
▶️ அரிமளம்
▶️ இலுப்பூர்
▶️ கறம்பக்குடி
▶️ கீரமங்கலம்
▶️ கீரனூர்
▶️ பொன்னமராவதி
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 10, 2025

புதுக்கோட்டை இரவு ரோந்து காவலர் விபரம்!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 10:09.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

News September 10, 2025

புதுக்கோட்டை: வங்கி கணக்கில் பணம் காணவில்லையா?

image

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <>இங்கே கிளிக் செய்து<<>> புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாருக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 10, 2025

புதுகை: கூலி தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது

image

விராலிமலையை அடுத்துள்ள துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலுசாமி (51). இவர் திங்கள்கிழமை இரவு டூவீலரில் சென்றபோது, கீரனூர் – விராலிமலை சாலை முல்லையூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய விராலிமலை போலீசார் விக்கி (31), மூர்த்தி (20), எட்வின் (26), மாரிமுத்து (20) ஆகிய 4 பேரை கைது செய்து புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

News September 10, 2025

புதுகை: B.E படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

image

புதுகை பட்டதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் செய்யவும்<<>> இதற்கு கடைசி தேதி 21.09.2025 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

News September 10, 2025

புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (11.09.25) புதுகை 29, 31 வார்டு காமராஜபுரம் சமுதாயக்கூடம், அறந்தாங்கி 20, 21, 27, வார்டு எல்.என்புரம் ராமகாந்தி திருமண மஹால், இலுப்பூர் வடுகர் தெரு ஏ ஆர் மஹால், கந்தர்வகோட்டை 7 ஊராட்சிக்கு தச்சங்குறிச்சி சமுதாய கூடம், பொன்னமராவதி 10 ஊராட்சிக்கு பழனி ஆண்டவர் திருமண மண்டபம், நடைபெற உள்ளது என கலெக்டர் அருணா தெருவித்துள்ளார்.

News September 10, 2025

புதுகை: மகளிர் உரிமைத்தொகை பெற இத பண்ணுங்க!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில் கிளிக் செய்து<<>> புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 10, 2025

புதுக்கோட்டை இரவு ரோந்து காவலர் விபரம் 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10-மணி முதல் நாளை காலை 6-மணி வரை 
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!