Pudukkottai

News December 27, 2024

புதுகை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார்கள் நுண்ணீர் பாசன இணைப்புடன் வழங்கப்பட உள்ளது. வேளாண்மை துறையின் மூலம் 90 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.13.50 இலட்சத்திற்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

News December 27, 2024

புதுகை பிரிட்டிஷ் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

image

புதுகை அரிமளம் சாலையில் பிரிட்டிஷ் காலத்து கல்வெட்டினை தமிழ் துறை மற்றும் தொல்லியல் வரலாற்று பேராசிரியர் காளிதாஸ் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர் இதில் “ஒற்றை புலி குடியிருப்பு 2 பர்லாங்” என்று எழுதப்பட்டுள்ளது 1680 முதல் 1948 ஆண்டுக்குள் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டாலும் தமிழில் எழுத்துக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News December 26, 2024

புதுகை ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

image

புதுகை பொன்நகரை சேர்ந்த ஆசிரியை அமல் லாரோ மியா, கிறிஸ்மஸ்துக்காக நேற்று முன்தினம் கீரனூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்க்கையில் 20 சவரன் நகையும் ₹50,000 பணமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தெரிய வந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 26, 2024

மேயர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர்

image

புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளர் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவர் செந்தில் காலமானார். இந்நிலையில்,  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று அவரது இல்லத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு  ஆறுதல் தெரிவித்தார். 

News December 26, 2024

மணமேல்குடி: ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட பணி 

image

மணமேல்குடி ஊராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நாளை (டிச.27) காலை 9 மணியில் இருந்து  கோலேந்திரன், சாத்தியடி, கோட்டைப்பட்டினம், வெட்டிவயல் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் புதிய ஆழ்குழாய் கிணறு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ளது என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அறிவுறுத்தினார்.

News December 26, 2024

கறம்பக்குடி அருகே 2 சிறுவர்கள் பலி

image

கறம்பக்குடி அருகே ஆத்தங்கரைவிடுதி தெற்குப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கொட்டகை போடுவதற்காக வீட்டின் முன்பு பள்ளம் தோண்டியுள்ளார். இதில் மழைநீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் அஸ்வின் (12), பழனிவேல் மகன் புவனேஸ்வரன் (9) இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் தவறிவிழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து மழையூர் போலீசார் விசாரித்தனர்.

News December 26, 2024

வேங்கைவயல்: குற்றவாளிகள் கைது செய்வது எப்போது?

image

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது எப்போது? வழக்கு எப்போது முடிவுக்கு வரும் என்பதே கேள்விக்குறியாக உள்ளதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துெள்ளனர்.

News December 24, 2024

பயணியர் நிழற்குடை கட்டுமானம்: ஆட்சியர் ஆய்வு

image

கீரமங்கலம் கிராமம் காமராஜ் நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழல் கூறை கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர்.

News December 24, 2024

பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது

image

கீரனூர் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய கல்லு கடை பகுதியில் சிலர் பண வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் கீரனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், சந்திரசேகர்,சரவணன், இளங்கோவன்,சின்னையா, பழனி, மேகநாதன், படையப்பா, சூர்யா, சக்திவேல், சிலம்பரசன், வெள்ளையன், செந்தில்குமார் பாரதி, செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

News December 24, 2024

வெள்ளனூரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

image

வெள்ளனூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சுற்றித் திரிவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற திருக்கோகர்ணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்ததில் புதுகையை சேர்ந்த லோகேஸ்வரன், முகமது அலி, செல்வம் என தெரியவந்தது. பின்னர், அவர்களிடம் ரூ.25,000 மதிப்புள்ள 21/2 கஞ்சா, இருசக்கர வாகனம் மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!