India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

புதுகை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து புதுக்கோட்டைக்கு குமார் (30) பைக்கில் சென்றுள்ளார். அப்போது, கீரனூர் மார்க்கெட் சாலையில் அவருக்கு எதிரே டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த கணேசமூர்த்தி (24) மோதியதில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரில் கீரனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

விராலிமலை தனியார் மஹாலில் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நடத்தும் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று (செ.15) காலை 10 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 36 வயது இருக்க வேண்டும். மாத ஊதியம் 20,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குடி அடுத்த பாத்தம்பட்டியை சேர்ந்தவர் சிவசாமி (73).இவர் பாத்தம்பட்டி கிளை சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த சுந்தரமூர்த்தி(29) என்பவர் மோதியதில் சிவசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

புதுகை மாவட்டத்தில் உள்ள மறமடக்கி, அறந்தாங்கி, தல்லாம்பட்டி, அழியாநிலை மற்றும் அரிமளம் ஆகிய துணைமின் நிலையங்களின் நாளை (16/9/2025) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நாளை (15.09.2025) காலை 10:30 மணியளவில் அன்புக் கரங்கள் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மக்களே மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி:  டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க.. 
Sorry, no posts matched your criteria.