Pudukkottai

News January 10, 2025

கோட்டைப்பட்டினம் அருகே 300 கிலோ கஞ்சா பறிமுதல்

image

கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பிடிபட்டது. காரைக்கால் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னர் லாரியில் கடத்திடப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை விசாரணை முடிந்த பின்பு முழுமையான விவரம் தெரிய வரும்.

News January 10, 2025

விருதுபெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் அறிவிப்பு

image

புதுகை மாவட்ட திருநங்கைகளுக்கு சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவப்படுத்தும் வகையில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கையர் தினத்தன்று முன்மாதிரி விருது (1லட்சம் ரூபாய்) வழங்கப்படுகிறது. அதன்படி சாதனை புரிந்தவர்கள் https://awards.tn.gov.in ஜன.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 10, 2025

EX.அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

image

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை, வழக்கு நடைபெற்று வரும் மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை சென்றுள்ளதால் வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News January 9, 2025

புதுகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் மும்பாலை கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்து பேசும்போது ‘பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் நிலவரம் குறித்து கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருவதாக’ மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.

News January 9, 2025

4,92,891 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு- ஆட்சியர் தகவல்

image

புதுகை மாவட்டத்தில் 4,92,891 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். புதுகை மாவட்டத்தில் 4,91,944 அரிசி அட்டை தாரர்களுக்கும், 947 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 8, 2025

பொங்கல் கரும்பை ஆய்வு செய்த ஆட்சியர்

image

தை திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கப்பட இருப்பதால், அரசர் குளம் பகுதியில் அரசால் வாங்கப்பட்ட செங்கரும்பு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர் அருணா இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News January 8, 2025

மழையூர் : டூவீலர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி

image

கறம்பக்குடி அருகே கம்மங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). விவசாயி. இவர் சொந்தவேலை காரணமாக மழையூர் தீத்தாணிப்பட்டிக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டூவீலர் மோதிய விபத்தில் ராஜேந்திரன் அதே இடத்தில் பலியானார். மற்றொரு டூவீலரில் வந்தவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மழையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

News January 8, 2025

தாட்கோ மூலம் பயிற்சி பெற அழைப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் தொழில்நுட்ப பயிற்சியாளர், பிராட்பேண்ட் டெக்னீசியன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். www.tahodco மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.

News January 8, 2025

இந்திய விமானப் படையில் சேர அழைப்பு

image

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர், அக்னிவீர் வாயு தேர்வு ஜன.29ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சி, எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. https://agnipathvayu.cdac.in/ என்ற இணையத்தில் ஜன.27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். SHARE IT.

News January 7, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

image

மணமேல்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 08.01.2025 புதன்கிழமையன்று காலை 10.00 மணியளவில், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், மும்பாலை கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர் பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!