India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையத்தில் CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் மனு செய்ய ஆவணமாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

புதுகை..வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், <

புதுக்கோட்டை:வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை: படித்த இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.
⏩வேலை பிரிவு: மத்திய அரசு வேலை
⏩துறைகள்: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
⏩பணி: Station Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 முதல் 33 வரை
⏩கல்வி தகுதி:Any Degree
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <
⏩கடைசி தேதி: 14.10.2025
பயனுள்ள இந்த தகவலை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரைச் சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான். நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த அவர் நேர்முக உதவியாளர் எஸ்.திருமாலிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். உறவினர்கள் சிலர் சொத்து பிரச்சனை குறித்து பலமுறை அதிகாரிகளிடமும் காவல் துறையினரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி பூச்சிமருந்தை குடித்து விட்டார். இதனையடுத்து மீட்கப்பட்ட அவர் புதுகை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுக்கோட்டடை மக்களே இன்று 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
✅புதுக்கோட்டை
கற்பக விநாயகர் மஹால்
✅திருவரங்குளம்
மாரியம்மன்கோவில் மண்டபம். கொத்தமங்கலம்
✅கறம்பக்குடி
அல்-ஜாஸ்மின் திருமண மண்டபம், மருதன்கோள்விடுதி
✅விராலிமலை
விராலுார் ஊராட்சி மன்ற கட்டிடம்,
✅பொன்னமராவதி
 கோவலூர் சமுதாயக் கூடம்
✅திருமயம்
 ஏ.கே.பி திருமண மண்டபம்
SHARE பண்ணுங்க !

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 16.09.2025 ஆம் தேதி மின்தடை பகுதிகள் குறித்து பார்க்கலாம்!
✅மரமடிக்கி சுற்றுவட்டாரம்
✅அறந்தாங்கி சுற்றுவட்டாரம்
✅தல்லாம்பட்டி சுற்றுவட்டாரம்
✅அழியாநிலை சுற்றுவட்டாரம்
✅அரிமலம் சுற்றுவட்டாரம் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுகை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வரும் (செப்.,19) காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், மற்றும் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார். உங்கள் பகுதி விவசாயிகளுக்கும் SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கிரனூர் அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.