Pudukkottai

News March 24, 2025

புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு 

image

புதுகை சித்த மருத்துவமனை அலுவலகத்தில் உதவியாளர் டேட்டா அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு IT,B.Tech, BBA,BCA,BSC-IT ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மார்ச்.31க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை http://pudukkottai.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்துள்ளார். உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 23, 2025

அன்னவாசல் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் பலியானார். புதுக்கோட்டை ராஜ கோபாலபுரத்தை சேர்ந்த முத்து அடைக்கலம் என்பவர் எதிர்வாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாடு முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 23, 2025

புதுக்கோட்டையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்

image

புதுக்கோட்டையில் சுற்றிப் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்: ▶️சித்தன்னவாசல் (ஓவியங்கள்) ▶️கொடும்பாளூர்(ஐவர் கோயில்) ▶️காட்டு பவா பள்ளிவாசல் ▶️ஆவூர் தேவாலயம் ▶️ஆவுடையார்கோவில் ▶️திருமயம் கோட்டை ▶️மலையடிப்பட்டி (குகைகோயில்- ஓவியங்கள்) ▶️திருக்குன்றக்குடி ▶️ குடிமியான்மலை (குடவரை கோயில்) ▶️ நார்த்தாமலை (கற்கோயில்). உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 22, 2025

காவலர் முரளி ராஜா புதுகை எஸ்.பி.யிடம் மனு

image

வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முரளிராஜா கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் பணிக்கு வராத காரணத்தால் அவரை விட்டோடி என்று மாவட்ட காவல்துறை அறிவித்தது. இந்நிலையில் காவலர் முரளிராஜா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தனது விளக்கத்தினை அளித்ததோடு தன்னை மீண்டும் பணியில் சேர்த்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளார்.

News March 22, 2025

புதுகை: அனைத்துக் கட்சியினருடன் SP ஆட்சியர் ஆலோசனை

image

மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் ஆட்சியரகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர் இன்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அதிமுக, திமுக மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

News March 22, 2025

புதுகை மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

image

புதுகை மாவட்டத்தில் நாளை (மார்ச்.23) 489 கிராம ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தின கருப்பொருள்களை பற்றி விவாதித்தல், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவீனம், ஊராட்சி தணிக்கை அறிக்கை, குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார். கிராம மக்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News March 22, 2025

உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்தி மானிய திட்டங்களில் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை பெறுவதற்கு முன்பதிவு செய்யுமாறும், அனைத்து விவசாயிகளும் உழவன் செயலியை பயன்படுத்துமாறும் மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டார்.

News March 22, 2025

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொழில் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் PM YASASVI என்ற திட்டத்தின் கீழ் மேல் படிப்பிற்காக கல்வி உதவித் தொகை பெற https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 21, 2025

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா 

image

புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, (பங்குனி மாதம்) பூச்சொரிதல் – மார்ச்.23ஆம் தேதியும், காப்புக்கட்டுதல் – மார்ச்.30, பொங்கல் விழா- ஏப்.,06, திருத்தேர்- ஏப்.,07, தீர்த்தம்- ஏப்.,08ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முத்துமாரி அருள் பெற பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க… 

News March 21, 2025

புதுகையில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்யலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மற்றவர்கள் பயன்பெற SHARE பண்ணுங்க.. 

error: Content is protected !!