Pudukkottai

News January 18, 2025

புதுகை: கீரனூர், மண்டையூர், திருமயத்தில் மின்தடை

image

கீரனூர், மண்டையூர், திருமயம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் இன்று (ஜன.18) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கீரனூர் பரந்தாமன்நகர், நான்கு ரதவீதிகள், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், அரசம்பட்டி, ஏனப்பட்டி உள்ளிட்ட பிற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 17, 2025

போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் அரசடிபட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள “ஆரோக்கியமாதா அகாடமி ” அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News January 17, 2025

இறந்த ராணுவ வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்!

image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வாகவாசல் கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் மகன் கண்ணதாசன் (56). கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தின் எல்லைப்பாதுகாப்பு படையில் பணியாற்றிவந்த இவர் தில்லியில் பணியில் இருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்தார். இதனையடுத்து வாகவாசல் கொண்டுவரப்பட்ட இவரது உடல் நேற்று ராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

News January 17, 2025

புதுக்கோட்டை: சிப்காட் பகுதிகளில் மின் நிறுத்தம் ரத்து

image

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை 18-01-2025 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இதனால் சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் மின் சப்ளை விநியோகம் செய்யப்படும் என சிப்காட் துணை மின் நிலைய அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 16, 2025

கிணற்றில் குழந்தையின் சடலம் : போலீஸ் விசாரணை

image

குளத்தூர், பிடாம்பட்டி கோயில் கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த 2 வயது பெண் குழந்தையின் உடலை தகவலின் பேரில் மீட்ட மண்டையூர் போலீசார் விசாரணையில் அதே ஊரைச்சேர்ந்த காதல் திருமணம் செய்த திலோத்தமா,முனியாண்டி தம்பதிகளின் குழந்தை தர்ஷிகா (2) என்பதும் குடும்ப பிரச்சனையில் திலோத்தமா குழந்தையை கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து முனியாண்டி புகாரில் போலீசார் திலோத்தமாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News January 15, 2025

புதுகை: வன்னியவிடுதியில் ஆட்சியர் ஆய்வு 

image

ஆலங்குடி வட்டம், வன்னியன்விடுதியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா  இன்று (15.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News January 15, 2025

புதுகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

 குளத்தூர் வட்டம், மங்கதேவன்பட்டியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா அவர்கள் இன்று (15.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.அ.அக்பர்அலி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News January 15, 2025

100 ஆண்டுகளை நிறைவு செய்த அன்னவாசல் காவல் நிலையம்

image

புதுக்கோட்டை மாவட்டம்  அன்னவாசல் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு. 100-ஆண்டு முடிவடைந்ததை அடுத்து காவல் நிலையம் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகிறது இதனையடுத்து காவல் நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் திருமதி லதா அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

News January 14, 2025

சாலையின் தடுப்பு சுவரில் மோதி ஒருவர் பலி

image

ஆவுடையார்கோவில், மீமிசல் குமரப்பன் வயல் பகுதியை சேர்ந்த வசந்த் (23), மனோஜ் (20) இருவரும் டூவீலரில் நேற்று அப்பகுதிக்கு சென்றபோது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்பேத்தி சாலையில் தடுப்புகட்டையில் டூவீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் வசந்த் அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மனோஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருப்புனவாசல் போலீஸார் விசாரிக்கின்றனர்.

News January 14, 2025

புதுகை : கிராம சபை கூட்டம் 26 ஆம் தேதி நடக்கிறது!

image

புதுகை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் வருகிற 26 ஆம் தேதி நடக்கிறது. இதில் கிராம ஊராட்சி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, ஜல் ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதால், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!