India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,19) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் இங்கே <

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அகரப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று (செப்19) எம்.எல்.ஏ நிதியில் டெஸ்க் பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்எல்ஏ முத்துராஜா கலந்துகொண்டு பள்ளி நிர்வாகத்திடம் டெஸ்ட் பெஞ்ச் ஆகியவற்றை ஒப்படைத்தார். இந்நிகழ்வில் மேயர் திலகவதி துணை மேயர் லியாகத்அலி மற்றும் அந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஒன்றிய பொறுப்பாளர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுகை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (செப்.,20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் தொழில் பேட்டை, ரங்கம்மாள் சத்திரம், முள்ளூர், ராயப்பட்டி, அபிராமி நகர், பாலன் நகர், பெரியார் நகர், ஜீவா நகர், சிட்கோ தஞ்சாவூர் சாலை ஆகிய பகுதியில் காலை 9 மணி – மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரமங்கலத்தைச் சேர்ந்த அஞ்சலை (55) என்பவர் நேற்று இரவு மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அவரது உடல் உடல்கூறு ஆய்விற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

நமது புதுக்கோட்டையில் நாளை 20.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை ஏற்படும் பகுதிகள்!
1.தொண்டைமாநல்லூர்
2.புதுக்கோட்டை
3.திருமயம்
4.சிப்காட்
5.அன்னபண்ணை
6.அன்னவாசல்
 ஆகிய சுற்றுவட்டாரா பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளாகும்!
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

புதுகை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும். இதில் நீங்கள் மாற்றம் செய்ய இங்கு<
Sorry, no posts matched your criteria.