Pudukkottai

News September 30, 2025

புதுகை: வெளியூர் செல்லும் மக்கள் கவனத்திற்கு!

image

புதுகை மக்களே, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து வெளி ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? அப்போ, இந்த தகவல் உங்களுக்கு தான்! விடுமுறை நாட்கள் முடிந்து வெளியூர் திரும்பும் போது, பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘1800 599 1500’ என்ற எண்ணில் எளிதாக புகாரளிக்கலாம். கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். SHARE பண்ணுங்க!

News September 30, 2025

புதுகை: சரக்கு வாகனம் மோதி துடிதுடித்து பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் கூகனூர் பகுதியில் நாகுடில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் அறிந்த நாகுடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் முதற்கட்டமாக இவர் அரியமாக்காடு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

News September 30, 2025

புதுகை மாவட்டத்தில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், புதுகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே<> க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

News September 30, 2025

புதுகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

காந்தி ஜெயந்தி நாளை (அக்.2) இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை அக்.2 அன்று மூட புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உத்தரவை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 30, 2025

புதுகை: கார் மீது தனியார் மோதி மோதி விபத்து!

image

திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் நேற்று காலை கார் மீது தனியார் பஸ் பக்கவாட்டில் மோதியது. இதில் காரின் பக்கவாட்டில் சிறிது சேதம் ஏற்பட்டது. இதனால் கார் டிரைவர், பஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரெயில்வே கேட்டின் பகுதியில் காரும், பஸ்சும் நடுரோட்டில் நின்றதால் மற்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

News September 30, 2025

புதுகை: சிறுமியை திருமணம் செய்தவர் கைது

image

திருமயத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என்று கடந்த ஆண்டு திருமயம் போலீஸ் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த முரளி (20) என்பவர் சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தது தெரியவந்தது. இதையடுத்து முரளி திருமயத்திலிருந்து சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரிய வர முரளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

News September 30, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்  

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.29) இரவு 10 மணி முதல் இன்று (செப்.30) காலை 6 மணி வரை  இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே  தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 29, 2025

புதுக்கோட்டை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

புதுக்கோட்டை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 18005991500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க!

News September 29, 2025

புதுகை: பைக், கார் வைத்திருப்போருக்கு UPDATE

image

புதுகை மக்களே..! RTO அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த https://parivahansewas.com/ இணையத்தில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இதில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

News September 29, 2025

புதுக்கோட்டை: சிறுமியை கடத்தி சென்ற இளைஞர் கைது

image

திருமயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என கடந்த வருடம் அவரது பெற்றோர்கள் திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த முரளி (20) என்பவர் கடத்தி சென்றது. இந்நிலையில் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!