Pudukkottai

News February 4, 2025

கடல் ஆமை, பசுக்களை பிடித்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் 

image

புதுகை மாவட்டம் அம்மாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் பசுக்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளாகும். இங்குள்ள கடல் ஆமை மற்றும் கடல் பசுக்கள் அழிந்து வரும் இனமாகும். வன உயிரின பாதுகாப்பு சட்டம் படி அவை பாதுகாக்கப்பட வேண்டும். அவைகளைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கடல் ஆமைகள் இனப்பெருக்க காலம் எனவே அவைகளை பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா எச்சரித்துள்ளார்.

News February 4, 2025

புதுக்கோட்டையில் இன்று மின்தடை

image

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாதந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், புதுக்கோட்டை, குளத்தூர், பாக்குடி, இலுப்பூர், மாத்தூர், விராலிமலை, திருவாப்பூர், கொன்னையூர், நகர்பட்டி, மேலத்தானியம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (பிப்.04) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News February 4, 2025

இலுப்பூர் சப்-டிவிசன் இன்று இரவு போலீசார் ரோந்து பணி

image

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சப் டிவிசன் பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விபரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இலுப்பூர் சப் டிவிசன் பகுதிகளில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் இதில் குறிப்பிடப்பட்டுள்ள போலீசார் செல் போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2025

கொன்னையூர் முத்துமாரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 16ஆம் தேதி பூத்திருவிழா, மார்ச் 17ஆம் தேதி அக்னிசட்டி மற்றும் பால்குடம், மார்ச் 23ஆம் தேதி காப்பு கட்டுதல், ஏப்ரல் 6ஆம் தேதி பொங்கல் திருவிழா,  ஏப்ரல் 7ஆம் தேதி நாடு செலுத்தும் திருவிழா ஆகியவை நடைபெற உள்ளன.

News February 2, 2025

மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்: ஆட்சியர் அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்வு காண மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News February 2, 2025

புதுக்கோட்டை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 230 பேர் கைது

image

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளுடன், தூண்டியவா்களையும் விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நேற்று (பிப்.1) மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக கூறி அக்கட்சித் தலைவா் உள்பட 230 பேரை போலீசார் கைது செய்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News February 1, 2025

காலை உணவு திட்டம் – கலெக்டர் அறிவுறுத்தல்

image

புதுகை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உள்ள காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்ட செயல்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாணவ, மாணவிகள் இந்த உணவு திட்டங்களின் மூலம் தடையில்லா கல்வியை பெற்று வருவதை அதிகாரிகள் உறுதி செய்திடவும் அவர் கேட்டுக்கொண்டார்.

News January 31, 2025

எந்தெந்த பகுதியில் நாளை மின்தடை

image

மாத்தூர், குளத்தூர், விராலிமலை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.1) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால்,  ஆவூர், ஒடுக்கூர், மாத்தூர், உப்பிலிக்குடி, குண்டூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரி உதவி செய்ய பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

அறந்தாங்கியில் 108 வாகனம் கவிழ்ந்து விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு அறந்தாங்கி வரும் போது வாமுனி கோவில் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 108 வாகனம் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தில் வந்த கர்ப்பிணி பெண்ணை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

News January 30, 2025

ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உத்தரவு

image

திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. அப்போது புகைப்படங்கள் ஏதும் எடுக்கக் கூடாது, ஊடகங்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி தரக்கூடாது, ஜகபர் அலி உடலை ஆய்வு செய்ய தேவையான வசதிகள் செய்து தர வேண்டும், மேலும் இந்த இந்த ஆய்வு திருமயம் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!