Pudukkottai

News February 28, 2025

ஜல்லிக்கட்டில் காளை குத்தியதில் இளைஞர் உயிரிழப்பு

image

புதுகை, திருமயம் அருகே உள்ள நெய்வாசல் திட்டானிக்கருப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு, இன்று(பிப்.28) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்நிலையில் காளைகள் வயல் பகுதிகளில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்ட காளையை அடக்க முயன்ற காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (24) என்ற வாலிபர் காளை குத்தியதில் படுகாயம் அடைந்து, காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 28, 2025

10ஆம் வகுப்பு பாஸ் போதும்.. அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு..

image

அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10,000 – 29,380 வரையிலான மாதச் சம்பளத்தில் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, <>[https://indiapostgdsonline.gov.in]<<>> என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..

News February 28, 2025

29 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அனுமதி

image

தமிழ்நாட்டில் பஸ் சேவை இல்லாத வழித்தடங்களில் மினி பஸ் சேவை வழங்கும் பொருட்டு, புதிய விரிவான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பஸ் சேவை இல்லாத 29 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே பஸ்களை இயக்கக்கோரி <>parivahan.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பாட்டுள்ளது.

News February 27, 2025

மணமேல்குடி: தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் இறப்பு 

image

மணமேல்குடியில் தென்னந்தோப்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறப்பு மணமேல்குடி காவல்துறையினர் துண்டிக்கப்பட்ட தலையை தீவிரமாக தேடி வருகின்றனர். காவல்துறை விசாரணைக்குப் பின்னர் கொலை குறித்த விவரம் முழுமையாக தெரியவரும். இறந்தவர் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News February 27, 2025

புதுகை தேவஸ்தான திருக்கோவில்களின் பராமரிப்பு செலவிற்காக 8 கோடி காசோலை

image

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள 225 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ. 8 கோடிக்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்களின் தக்கார்/உதவி ஆணையர் த.வே.சுரேஷிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

News February 27, 2025

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், அக்கவுன்ட்ஸ் பிரிவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு உள்ளிட்ட மண்டலங்களில் மொத்தம் 457 ‘அப்ரென்டிஸ்’ பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 32 இடங்கள் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு <>iocl.com என்ற இனையத்தை<<>> அனுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

News February 27, 2025

மறவநேந்தல்: தீயில் எரிந்து குடிசை வீடு சேதம்

image

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மறவநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது குடும்பத்தினர் குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் விலக்கு சாய்ந்து குடிசை வீடு பற்றி எரிந்து முழுவதுமாக சேதமானது. இந்நிலையில் வீட்டை இழந்த குடும்பத்திற்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு உடனடியாக வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

News February 25, 2025

புதுகை: செல்வமகள் சேமிப்பு திட்டம் 5 நாட்களுக்கு சிறப்பு முகாம்.

image

புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை கோட்டத்தில் பொன்மகன் சேமிப்பு கணக்குகள் தொடங்குவதற்கு வசதியாக 24ம் தேதி (நேற்று) முதல் 28ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதற்காக அஞ்சலகங்களில் சிறப்பு கவுன்டர்கள் செயல்படுகின்றன என்று கூறினார்.

News February 25, 2025

புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். SHARE NOW.

News February 25, 2025

எலி ஸ்பிரே வைத்து விளையாடிய சிறுவர்கள் GHஇல் அனுமதி

image

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மண்ணவேலாம்பட்டி கிராமத்தில் எலிக் கொல்லி ஸ்பிரேயை 4 குழந்தைகள் விளையாட்டாக முகத்தில் அடித்துக் கொண்ட நிலையில், அச்சமடைந்த அவரது பெற்றோர்கள் நான்கு குழந்தைகளையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!