India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

புதுகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டை பெற, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு பதிவு செய்யலாம் (அ) ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் பதிவு செய்து பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

மத்திய அரசின் BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கருத்தங்கல்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் (60). இவர் நேற்று விராலிமலை அடுத்த கோல்வயலில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக SOC-யில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் மலைக்கண்ணு (35) அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே சாக்கோட்டையை சேர்ந்த பொினாபேகம் (45) என்பவர் நேற்று அறந்தாங்கியில் இருந்து சாக்கோட்டைக்கு பேருந்தில் பயணம் செய்தார். அறந்தாங்கி அருகே பச்சலூர் சோதனைசாவடி பகுதியில் பேருந்து சென்றபோது அவர் பையில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் திருடு போனதாக சத்தம் எழுப்பினார். பின் பேருந்த நிறுத்தி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் அவர் புகார் அளித்தார்.

புதுகை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக 2025-26 ஆம் ஆண்டுக்கான பேச்சாற்றல், படைப்பாற்றல் போட்டி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் வரும் அக்.,14-ம் தேதி (11,12-ம் வகுப்பு மட்டும்) நடைபெற உள்ளது. அதற்கு முதல் பரிசு ரூ.10,000, 2-ம் பரிசு ரூ.7000, 3-ம் பரிசு ரூ.5000 வழங்கப்பட உள்ளன. pdkttamilthai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.05) இரவு 10 மணி முதல் இன்று (அக்.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற சாந்தநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சாந்தநாதரை தரிசித்தால் முன்வினை பாவம், திருமணத்தடை, கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி காசி, ராமேஸ்வரம் யாத்திரை சென்ற புண்ணியபலன்கள் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

நாகை மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்.. அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.