Pudukkottai

News August 23, 2024

கறம்பக்குடியில் 4 பேர் கைது

image

கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட மூணாம் நம்பர் லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெங்கடேசன், வினோத் பாரி, சக்திவேல் ,சபரி வாசன், ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.27,370 ஆண்ட்ராய்டு போன் 5, ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News August 23, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய டிஎஸ்பி

image

புதுக்கோட்டை நகர டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ராகவி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து, புதுக்கோட்டை நகர டிஎஸ்பியாக அப்துல் ரகுமான் இன்று பொறுப்பேற்றார். இவர், ஏற்கனவே புதுக்கோட்டை பகுதியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக நகர டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள அப்துல் ரஹ்மானுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News August 23, 2024

புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு என்ன தேவையோ அதனை மனுவாக அளித்து நிவாரணம் பெறலாம் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை எடுத்து கூறினால் அதனை உடனே நிவர்த்தி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

News August 23, 2024

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

image

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரி மற்றும் ஆளினர்கள் மொத்தம் 4 நபர்களுக்கு இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

News August 23, 2024

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

image

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரி மற்றும் ஆளினர்கள் மொத்தம் 4 நபர்களுக்கு இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

News August 22, 2024

புதுக்கோட்டையில் உடல் ஊனமுற்றோருக்கு உதவிய எம்பி

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, முன்னிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை இன்று வழங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

News August 22, 2024

உருட்டு கட்டையால் தாக்கப்பட்ட மாணவன்

image

ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவரது மகன் அஸ்வின்ராஜ் வயது (17). இவர் வெண்ணாவல்குடி அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளிமுடிந்து சூத்தியன்காடு செல்லும் சாலையில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சிலர் அஸ்வின்ராஜை உருட்டு கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த மாணவன் மருத்துவமனையில்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News August 22, 2024

மயில் பறந்ததால் இளம்பெண் மரணம்

image

ஆவுடையார்கோவிலை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், நேற்று மைசூருக்கு சென்று விட்டு ஆலங்குடி செல்லும் வழியில் பாத்தம்பட்டி அருகே வந்த போது மயில் ஒன்று பறந்தது. இதனால், நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் திடீரென பிரேக் போட்டபோது, அவரது மகள் வீரலட்சுமி (28) தூக்கி வீசப்பட்ட நிலையில், தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்தார். இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

News August 22, 2024

புதுகை அருகே மாயமான பிள்ளையார் சிலை

image

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் கோவில் கட்டி வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில், கல்லூரி கோவிலுக்குள் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என்றும், பிள்ளையாரை கண்டுபிடித்து தர கோரி கல்லூரி நிர்வாகத்தினர் ஆதனக்கோட்டை போலீசாரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளனர்

News August 22, 2024

நான்கு வழி சாலை பணியை ஆய்வு செய்த அதிகாரிகள்

image

திருச்சி முதல் மீமிசல் வரை முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023-2024ஆம் ஆண்டில் இருவழி சாலை இருந்து 4 வழி சாலையாக அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணியினை புதுகை அசோக்நகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. அந்த பணியினை திருச்சிராப்பள்ளி கண்காணிப்பு பொறியாளர் செந்தில், புதுகை கோட்ட பொறியாளர் தமிழகன், ஆலங்குடி உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

error: Content is protected !!