India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அறந்தாங்கியை அடுத்த ஆயிங்குடி மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (24). இவர் நேற்று இரவு வல்லவாரி பகுதியில் நடந்து சென்றபோது, அப்பகுதியில் இருந்த ஓட்டலில் சாப்பிட வந்த சிலர் ஹோட்டல் பணியாளர்களிடம் தகராறு ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை பிரபு சமாதானம் செய்த போது மணமேல்குடியைச் சேர்ந்த ஜான் மற்றும் டேவிட் ஆகியோர் பிரபுவை கல்லால் அடித்ததில் பிரபு உயிரிழந்தார்.

கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சமயபுரம் பாதயாத்திரை சென்ற போது விபத்தில் சிக்கினர். இதில், 16 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் உள்பட 22 படுகாயமடைந்தனர். இதில், கவிதா, சின்னாத்தாள், மாலா, இளஞ்சியம் ஆகிய 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்நிலையில், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னதுரை மருத்துவமனையில் உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளாார்.

கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். நேற்று நள்ளிரவில் வளம்பக்குடி வழியாக சென்றபோது, தஞ்சையில் இருந்து வந்த மினி வேன் ஒன்று மோதி தூக்கிவீசப்பட்ட நிலையில், 22 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில், 6 பேர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முதல் சுற்றில் 1-19 வயதுடைய 5,04,840 மாத்திரைகளும், 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கு 1,32,271 மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளது. 2வது கட்டமாக வரும் 30ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. மொத்தமாக 6,51,681 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

அறந்தாங்கியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுரிக்கு மேற்கு வங்கத்தில் உள்ள ராணுவ வீரர்கள் இன்று வருகை புரிந்தனர். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பொறியியல் பட்டதாரிகள் ராணுவத்தில் பணிபுரிவதற்கு எண்ணற்ற வேலை வாய்ப்பு பற்றியும், அப்பணியில் பணி புரிவதற்கு பயிற்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. மேலும் மாணவர்களை ராணுவத்தினர் பாராட்டினர்.

தமிழக பாரதிய ஜனதாவின் மாநில செயலாளர் வினோத்செல்வம் இன்று திருமயம் வருகை புரிந்தார். அவரை மாவட்ட தலைவர் ஜெகதீசன், மண்டல தலைவர் கண்ணனூர் முருகேசன், ஆதவா செல்வகுமார், மாவட்ட செயலர் ஆறுமுகம் உட்பட நிர்வாகிகள் வரவேற்றனர். பிறகு அவர் திருமயம் சிவன், பெருமாள் குடைவரை கோயில்கள், கோட்டை காலபைரவர் கோயில் ஆகியவற்றுக்கு சென்று வழிபாடு செய்தார். பிறகு அவர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்ட குற்ற புலனாய்வு துறை டிஎஸ்பி கல்யாணகுமார் கரூர் மாவட்டத்திற்கும், குற்றப்பிரிவு துறை டிஎஸ்பி செல்வம் திருப்பூருக்கும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி கந்தசாமி விழுப்புரத்திற்கும் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை டவுன் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்தவர் ராகவி இவர் சென்னை சிட்டி டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையில் பணியில் இருந்த போது பல்வேறு குற்றவாளிகளையும் பல்வேறு குற்ற சம்பவங்களையும் திறம்பட கையாண்டு பல்வேறு பாராட்டுகளை பெற்றுள்ளார். தற்போது அவர் சென்னை சிட்டி டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவுடையார் கோவில் அடுத்த உப்பளம் பகுதியில் 3 சுவாமி சிலைகள் இருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற வருவாய் துறையினர், மூன்று கல்லால் ஆன சுவாமி சிலைகளை மீட்டனர். அதற்கு யாரும் உரிமை கூறாததால், மூன்று சிலைகளும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருமயம் அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளை பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இன்று இந்த கோவிலில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, வடக்கு வட்டார தலைவர் அர்ஜுனன், ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.