India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவரங்குளத்தில் இயங்கி வரும் புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி 7 ஆம் ஆண்டு விழாவில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தம்பி இராமையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி தாளாளர் இரத்தினம் நிர்வாக இயக்குநர் துரை மற்றும் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாளையூர் குழலை சமுதாயக் கூடத்திலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், நாகுடி ஊராட்சி, நாகுடி ஆர்.ஆர்.பி. டீலக்ஸ் மஹாலிலும், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், நம்பம்பட்டி சமுதாயக் கூடத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கோரிக்கையின் அடிப்படையில், வரலாற்றில் முதன் முறையாக பெங்களூரு வழியாக மைசூருக்கு மாநாடு – சிவகங்கை – காரைக்குடி வழியாக நேரடி சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் 05.09.2024, 08.09.2024 (வியாழன், ஞாயிற்றுக்கிழமை) நாளில் செங்கோட்டையில் இரவு 7:45 மணிக்கு புறப்படும். எனவே முன்பதிவு செய்பவர்கள் செய்து கொள்ளலாம். ஷேர் செய்யவும்

புதுக்கோட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் கட்சி மாநில தலைவருமான சு.திருநாவுக்கரசர் மகன் திருமண விழாவை முன்னிட்டு இன்று சென்னையில் மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமலஹாசனை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.

அன்னவாசல் சாலையில் இன்று நட்சத்திர ஆமை ஒன்று சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளின் சப்தத்தை கேட்டு சாலையின் நடுவே நின்றுவிட்டது. அந்த ஆமை அவ்வழியாக வரும் வேறு வாகனங்கள் அடிபட்டு விடுமோ என்ற அச்சத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த அபிபுல்லா என்பவர் குச்சியின் உதவியுடன் சாலை கடக்க உதவினார். மேலும் ஆமையை அவ்வழியாக சென்றவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சு. திருநாவுக்கரசர் நேரில் சந்தித்தார். அப்போது தனது மகன் எஸ்.ஆர்.டி. சாய் விஷ்னுவின் திருமண அழைப்பிதழை வழங்கினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் விசிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பிற்காக கலந்தாய்வு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் துவங்கியது. இதில் புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் மாணவ, மாணவியர்கள் 28 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் மூன்று பேருக்கு பல் மருத்துவம் படிக்கவும் இடம் கிடைத்துள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது சாதனையாக கருதப்படுகிறது.

அறந்தாங்கி அடுத்த வல்லவாரி கிராமத்தில் உள்ள ஹோட்டலில் இன்று சாப்பிட்டுக் கொண்டிருந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஆம்லெட் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட நேரத்திற்குள் ஆம்லெட் வராததால் ஹோட்டல் உரிமையாளரிடம் சண்டை அடித்துள்ளனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் ‘ஏயா, இப்படி சண்டை போடுகிறீர்கள்’ என்று கேட்டுவிட்டு வந்து சமாதானம் செய்தனர். இதில் சமாதானம் செய்ய வந்த நபர் ஒருவரை தாக்கி அவர்கள் கொலை செய்துள்ளனர்.

சென்னை மாமல்லபுரத்தில் மார்ட்டின் குரூப் மற்றும் ஸ்போஸ் ஷோன் இந்தியா இணைந்து நடத்திய மிஷின் ரூமி 2024 சாட்டிலைட் லாஞ்சிங் நிகழ்ச்சி கலந்து கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மிஷின் வடிவமைப்பாளர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் சாட்டிலைட் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருமயத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக இருக்கும் எந்தப் பெண்ணும் வீட்டுக்குச் செல்ல வாகனம் கிடைக்காமல் போனால், காவல்துறை உதவி எண்களை (1091 மற்றும் 7837018555) தொடர்பு கொண்டு வாகனம் கோரலாம் என்ற இலவசப் பயணத் திட்டத்தை காவல்துறை தொடங்கியுள்ளது. அவர்கள் 24×7 மணிநேரமும் வேலை செய்வார்கள் என்று திருமயம் காவல்துறையினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.