India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை வந்தார். முன்னதாக அவர் மதுரையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வந்து இங்குள்ள கோட்டை காலபைரவர் கோயில், சத்தியவாகீஸ்வரர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று மாலை திருமயம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் வருகை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
சோடியூரை சேர்ந்தவர் கணேசன் மகன் பாலாஜி (19). இவர் இலுப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி விழாவில் பங்கேற்க நேற்று ஒத்திகையில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் புதுக்கோட்டை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே சிவகங்கை எம்.பி தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘திமுக அரசு 3 ஆண்டுகளில் முத்தான முத்திரை பதிக்கும் பல திட்டங்களை தந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் நிலைத்து உயரவும், மக்களின் நலன் காக்கவும் I.N.D.I.A கூட்டணி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்காக ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
அன்னவாசல் அருகே ஊரப்பட்டியை சேர்ந்தவர் விஜயநிலா (33). இவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 7 இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் விஜயநிலா உடலை அடக்கம் செய்துள்ளனர். பின்னர் சாவில் சந்தேகம் இருப்பதாக விஏஓ புகாரையடுத்து நேற்று அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பூதகுடி கிராம நிா்வாக அலுவலா் லட்சுமி காந்தன் பணி நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் இலுப்பூா் கோட்டாட்சியரகம் சென்றுவிட்டு மீண்டும் இலுப்பூா்- விராலிமலை சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த 4 இளைஞா்கள் விஏஓ-வின் வாகனத்தை மறித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனா். கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு சில வாரங்களாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமயம் அரசு குடோன் அருகே திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலையை புள்ளி மான் ஒன்று நேற்று சிலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே செத்தது. இதனை அறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளி மான் உடலை மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.