India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருமயம் புகழ்பெற்ற ஸ்ரீ கோட்டை கால பைரவர் ஆலயத்தில் சுவாமி வழிபாடு பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவருடைய மூத்த மகன் பிரதீப் கோட்டை காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர் நிகழ்வின் ஓபிஎஸ் ஆதரவாளர் இருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கமிஷன் மண்டிகளில் இன்று எலுமிச்சை ரூ.100 முதல் 120 வரை விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டு, வியாபாரிகளுக்கு 150 வரை விற்கப்படுகிறது. கடந்த ஒரு சில தினங்களாகவே எழுமிச்சை 150 ரூபாய் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குளிர்பான கடைகளுக்கு வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்வதால் எலுமிச்சை விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

அன்னவாசல்,மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் குமார், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன், சிவா, செல்லதுரை ஆகிய 3 பேரும் நிர்மல்குமார் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது முருகேசன் கையில் வைத்திருந்த அறிவாளால் நிர்மல்குமாரை வெட்டி, அவரது தாயையும் தாக்கி சென்றுள்ளனர்.

மணப்பாறை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை இலுப்பூர் அருகே உள்ள மேலசித்தக்குடிப்பட்டியை சேர்ந்த 23 வயது வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி இரண்டு முறை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கொடுத்த புகாரின் பேரில், இலுப்பூர் ஆய்வாளர் வனிதா இன்று வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர். மருந்துகளின் அளவு மற்றும் பற்றாக்குறை உள்ளதா என கேட்டறிந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 21.09.2024 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். இன்று ( 21.09.2024 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.

1904ஆண்டில் தமிழ்நாட்டில் முதன் முதலில் நீராவி பேருந்து இயங்கியது. திருச்சியில் இருந்து புதுகைக்கு ஓட்டிய முதல் பேருந்து பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பாதையில் இந்த பேருந்து உபயோகத்திற்கான ஆங்காங்கே பெரிய தொட்டிகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். இந்த பேருந்தை வாங்கியது புதுகை மன்னர் தான். ஷேர் செய்யவும்

புதுக்கோட்டை மங்களாபுரம் பிரீத்தி, கரம்பக்குடி வெட்டன் விடுதி நந்தினி, நடுப்பட்டி தீபா, காட்டு மருதம்பட்டி ரேணுகா, அன்னவாசல் சுமித்ரா ஆகிய 5பேரும் வீட்டில் இருந்து கடைக்கு வெளியே செல்வதாக கூறியவர்கள் வீடு திரும்பவில்லை. இது குறித்து அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் அவர்களது பெற்றோர்கள் அளித்த புகார் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஜெகதாபட்டினம் மீனவர்கள் 14 பேர் 3 விசைப்படகுகளில் எல்லை தாண்டி வந்தாக கூறி கடந்த 8 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், அக்டோபர் இரண்டு வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 14 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விராலிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட சிலைகள் இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆலயத்தில் சிசிடிவி கேமரா வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சிலை உடைப்பு விராலிமலை மட்டுமல்லாது முருக பக்தர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவன்,முருகன்,பெருமாள்,விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.