India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக தொழிலாளர் தினமான
நாளை மே 1 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அன்னிய மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு(பார்) விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி அருகே கீழையூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்
லாரி டிரைவர்.நேற்று
இரவு 8 மணிக்கு குரும்பூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக சென்ற கார்
எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்தகாயம் அடைந்த வெங்கடேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை மேல்கரை வீதியில் வசித்து வருபவர் சையது இப்ராஹிம் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.நேற்று காலை வீட்டிற்கு சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 100 கிராம் வெள்ளிபொருட்கள் , புடவைகள் உள்ளிட்டவை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கந்தர்வகோட்டை மேல்கரை வீதியில் வசித்து வருபவர் சையது இப்ராஹிம் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.நேற்று காலை வீட்டிற்கு சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 100 கிராம் வெள்ளிபொருட்கள் , புடவைகள் உள்ளிட்டவை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
உலகில் அமைதி நிலவ வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில் முற்றோதல் குழுவினரால் நடத்தப்பட்ட நிகழ்வின் தொடக்கமாக நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதையடுத்து முற்றோதல் குழுவினரால் திருவாசகம் மற்றும் பன்னிரு திருமுறைகள் படிக்கப்பட்டது.
கறம்பக்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று கறம்பக்குடி கடைவீதி பகுதியில் சோதனை நடத்தினர் அப்போது தாணியக்கடை முக்கம் அருகே புகையிலை பொருட்களை விற்ற
அஜித்குமார், முகாசின் ஆகியோரை போலீசார்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு
மனநல மருத்துவ சங்கத்தின் சார்பில் நேற்று தொடங்கிய 2 நாள் மனநல மருத்துவ கருத்தரங்கிற்கு மாநிலத்தலைவர் டாக்டர் சி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கருத்தரங்க மலரை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா வெளியிட்டார். இதில் மூத்த மருத்துவர்கள் ராமசுப்பிரமணியன், ஜெயந்தினி , விஜய்சுவாமிநாதன் , அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் மலையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காரையூர், விளாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(6) நேற்று மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பாம்பு கடித்ததில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு அருகிலிருந்தவர்கள் புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாதேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து காரையூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
காரையூர், விளாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(6) நேற்று மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பாம்பு கடித்ததில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு அருகிலிருந்தவர்கள் புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாதேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து காரையூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அறந்தாங்கியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் பெருங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் சூப்பர்வைசராக உள்ளார். நேற்று நள்ளிரவு அவர் கடையில் இருந்து அறந்தாங்கியில் வசிக்கும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
Sorry, no posts matched your criteria.