India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டையில் சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் உள்ளது பிரபல குகை ஓவியங்கள். சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இதன் அருகிலேயே சமணர் படுக்கைகள், மற்றும் தமிழ் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.1990களில் இது செயற்கை வண்ணத்தால் புதுப்பிக்கப்பட்டது.
புதுக்கோட்டையில் மாலையீடு தேவாலயத்தின் பாதிரியாராக ஜான்தேவசகாயம் என்பவர் இருந்து வருகிறார். இவரது மனைவி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் வெளியூரில் இருந்து இன்று காலை வீடு திரும்பிய நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.இது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி பகுதி போஸ் நகர் திருக்கட்டளை சாலையில் அமைந்துள்ள பூத உடல் நல்லடக்கம் செய்யும் மயான பகுதியை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பணிகளை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா மற்றும் புதுகை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடல் உணவில் நண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது. இந்நிலையில், மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் கடந்த 2 மாதமாக ஒரு கிலோ நண்டு ரூ.500-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிறிய நண்டு பெரிய நண்டு என ஏராளமான நண்டுகள் கிடைப்பதால் மார்கெட்டில் நேற்று நண்டு ஒரு கிலோ ரூ.350க்கு விற்பனையானது.இதனால் நண்டு அதிகமான
நண்டுகளை வாங்கி செல்கின்றனர்.
அதிமுக ஐடி விங்ஸ் திருச்சி மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் பல்வேறு இடங்களில் சிறந்த முறையில் கோடை கால தண்ணீர் பந்தலை அமைத்து பொதுமக்கள் தாகம் தீர்க்க தண்ணீர், மோர், சர்பத், பழவகைகள், ஐஸ்கிரீம், டீ, சம்சா உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது. இதற்காக இன்று மு.அமைச்சர்,
சி.விஜயபாஸ்கர் MLA பணியை பாராட்டி, ஐடி மாவட்டசெயலாளர் ரஞ்சித்குமாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
புதுகை ஆட்சியரக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்தும், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும் மற்றும் கோடைகால மழை குறித்தும், அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (27.05.2024) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை, வாராப்பூர் நெருஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் இவர் திருமயம் தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மதியழகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்க நாட்டை சார்ந்த காட்டுப்பட்டியில் முனீஸ்வரர் வடமாடு ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறந்த காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி அணிக்கும் பல்வேறு சிறப்பு பரிசுகளை வழங்கினார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை, பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த காளைகள் பங்கேற்றன. இதில் போட்டியில் கலந்து கொண்ட 10 பேருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. மஞ்சுவிரட்டில் 13 காளைகள் பங்கேற்றன.
புதுக்கோட்டையில் நேற்று தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ‘பாவேந்தரின் தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற நிகழ்ச்சி தமிழ்ச்செம்மல் நெ.இரா.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் புலவர் கு.ம.திருப்பதி ‘பாவேந்தரும் தமிழும்’ என்ற தலைப்பில் பேசினார். கவிஞர் மு.கீதா ‘பாவேந்தரும் மொழியும்’ என்ற தலைப்பில் பேசினார். கவிஞர் காசிநாதன்
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிறைவில் பேரா. சா. விஸ்வநாதன் நன்றி கூறினார்.
Sorry, no posts matched your criteria.