Pudukkottai

News June 8, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. எனவே மாவட்டத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகள், குறைகேட்பு கூட்டங்கள் வழக்கம்போல நடைபெறும். வருகின்ற திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக ஆட்சியரை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

புதுக்கோட்டை அலுவலகத்தில் சந்திப்பு கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தளர்ந்து அரசு அதிகாரிகளால் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை சந்தித்து கூட்டம் நடத்தினர்.

News June 7, 2024

புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

image

புதுகையில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எம்எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், அறிவியல் இயக்கத்தின் துணைத்தலைவர் சதாசிவம் தலைமையில், நேற்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில், நகராட்சி 26 வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினர். கருத்தரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தனபதி , முதன்மை விஞ்ஞானி ராஜ்குமார் ஆகியோர் பேசினர்.

News June 7, 2024

புதுக்கோட்டை அருகே மக்கள் தொடர்பு முகாம்

image

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டம், திருமயம் வட்டம், கோட்டூர் சரகம் லெம்பலக்குடி
கிராமத்தில் வரும் 12 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதனால் 7 ஆம் தேதி இன்று முதல் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான முன் மனுக்களை லெம்பலக்குடி கிராம சேவை மையத்தில் அளித்து பயன்பெறலாம். இத்தகவலை ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

புதுக்கோட்டையில் ஆலோசனை கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தொகுதி IV தேர்வு நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News June 7, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக பூட்டி சீல் வைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக புதுகை வட்டாட்சியர் அலுவலக வைப்பறையில் நேற்று பாதுகாப்பாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில்
பார்வையிட்டார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News June 6, 2024

ஆவுடையார்கோவில்: குளத்தில் மூழ்கடித்து கொலை

image

புதுகை, ஆவுடையார்கோவில் அருகே உள்ள அரசர்குளம் தென்பாதி பகுதியில் சாந்தி அம்மாள் என்ற மூதாட்டி குளிக்க சென்றுள்ளார். அவர் குளத்தில் குளித்திருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்கச் சங்கிலி மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கொலை செய்த நபர்களை தேடி வருகின்றனர்.

News June 6, 2024

புதுக்கோட்டையில் 9 செ.மீ மழைப்பதிவு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டையில் 9 செ.மீ, பெருங்கலூர், மீமிசல் பகுதியில் 8 செ.மீ, அன்னவாசலில் 6 செ.மீ, ஆலங்குடி, வம்பன் KVK AWS, குடுமியான்மலை ஆகிய பகுதிகளில் 5 செ.மீ அரிமலம், திருமயம், பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் 4 செ.மீ மழைப்பொழிவு பதிவானது.

News June 6, 2024

புதுக்கோட்டை: 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.

News June 6, 2024

புதுக்கோட்டையின் நகரப் பகுதிகளில் சாலை மறியல்

image

புதுக்கோட்டையை மாநகராட்சியாக அறிவித்ததை கண்டித்தும் புதுக்கோட்டை மீண்டும் நகராட்சியாக இருக்க வேண்டும் என்றும் அல்லது பேரூராட்சியாக ஆக்க வேண்டும் என்றும் 11 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேண்டாம் மாநகராட்சி வேண்டும் பேரூராட்சி என்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.காவல்துறையினர் அவர்களை கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர்.

error: Content is protected !!