Pudukkottai

News June 10, 2024

மனவளர்ச்சி குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு

image

புதுக்கோட்டை, நகராட்சி அம்பாள்புரம் 1ம் வீதி சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இயங்கும் கிரசண்ட் மனவளர்ச்சி குறைபாடு உடையோருக்கான சிறப்பு பள்ளியில் மதிய உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கும் விழாவானது இன்று (ஜூன்10) நடைபெற்றது. இந்நிலையில் மழவராயன்பட்டியை சேர்ந்த புஷ்பராணி என்ற பெண் மாவட்ட அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றிக் கொண்டு என்னுடைய வீட்டை எனக்கு வாங்கித் தர வேண்டும் என கூறியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News June 10, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து

image

அன்னவாசல் அருகே அண்ணா பண்ணையைச் சேர்ந்தவர் மரியசூசை என்பவரது மனைவி லீலா மேரி (50). சம்பவத்தன்று இவர் வீட்டிலிருந்து டீ கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லீலா மேரி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த அன்னவாசல் போலிஸார் லீலா மேரியின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 10, 2024

புதுக்கோட்டை அருகே திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி!

image

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் அருளிச்செய்த எட்டாம் திருமுறை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி ஆலயமூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வழிபாடு மற்றும் திருவாசக முற்றோதல் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News June 9, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருக்கோகர்ணம் நத்தம் பண்ணையைச் சேர்ந்தவர் பாஸ்கர் (55). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர்லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ஆதனக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் மரியதாஸ் இறந்தவரின் உடலை புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

News June 9, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

புதுக்கோட்டை வண்டிப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கலியமூர்த்தி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ரைஸ்மில் பஸ்நிறுத்தம் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சரவணன் படுகாயமடைந்தார். இதுகுறித்து செம்பட்டிவிடுதி
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News June 8, 2024

புதுகை: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விடுத்துள்ள அறிவிப்பில் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின்கீழ் 5 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி 10.06.2024 முதல் 10.07.2024 வரை அனைத்து கிராமங்களிலும் போடப்பட உள்ளதால் கால்நடை வளர்ப்போர் முகாம் நடைபெறும். இடங்களுக்கு தவறாமல் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டு பயன் பெறலாம். என அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

News June 8, 2024

புதுகையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை

image

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, புதுகை உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News June 8, 2024

புதுகை: சீமைக் கருவேல மரங்களை அகற்ற முடிவு!

image

புதுக்கோட்டை, காரைக்குடி நெடுஞ்சாலையிலுள்ள கவிநாடு கண்மாயில் மாவட்ட சீமைக் கருவேல மரங்களை அகற்றும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 548 சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், வருவாய் அலுவலர் ஆர்.ரம்யாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News June 8, 2024

புதுக்கோட்டை:ஊர் காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

image

கடற்கரையோர காவல் நிலைய ஊர் காவல் படை பணிகளுக்கு மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது இதற்கான விண்ணப்பங்களை வருகின்ற 10ம் தேதி முதல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வருகின்ற 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் காலை 10 மணி முதல் 5 மணி வரை கல்விச் சான்றிதழ்கள் அசல் மட்டும் நகலுடன் நேரில் வருமாறு புதுக்கோட்டை எஸ்பி செய்தி வெளியீடு.

error: Content is protected !!