India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வரும் 21-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினமும் அம்மன் வீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியத் திருவிழாவான தேரோட்டத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
பொன்னமராவதி, நெய்வேலி
கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(28). இவர் தனது மகன் தர்ஷனுடன் (2) அரசமலையில் பால் விநியோகம் செய்து விட்டு பைக்கில் திரும்பும்போது கோபி என்பவர் ஓட்டி வந்த பைக்கும் மோதியது. இதைப்போன்று மகாலெட்சுமி என்பவரின் பைக்கும் மோதிக்கொண்டது.
இதில் படுகாயமடைந்த மூவரில் சிறுவன் தர்ஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
2024 மக்களவை தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை
மறுநாள் (ஏப்.17) முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் மாதம் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேற்கண்ட 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறையை போல ஓட்டல்கள் பார்களும் இயங்காது என ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே கொல்லன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது
3 ஏக்கர் தைலமரக்காட்டில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில், தெற்கு 4-ஆம் வீதி ஆஞ்சனேயர் கோயில், மேலராஜ வீதியிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில், குமரமலை பாலதண்டாயுதபாணி கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை நாடாளுமன்ற இந்தியா கூட்டணியின் கட்சியின் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் அவா்களுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு இன்று ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் வாக்குகள் சேகரித்தனர். நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றிய கழகச் செயலாளர் தங்கமணி, ஆலங்குடி நகர கழக செயலாளர் பழனிக்குமார், பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம் கலந்து கொண்டனா்.
காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்யும் பணி இன்று நடைபெற உள்ளது. எனவே இலுப்பூர் பேரூராட்சியில் இன்று (14.04.2024) குடிநீர் வினியோகம் இருக்காது என் அதிகாரிகள் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செம்பட்டிவிடுதி ஊராட்சி பூண்டியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் நேற்று ஜல்லிக்கட்டு காளையை தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டிப்போட்டார். அப்போது
எதிர்பாராதவிதமாக காளை கோவிந்தனை குத்தியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதிமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. நேற்று மாலை வானம் கருமேகம் சூழ்ந்து சற்று நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. கோடை நேரத்தில் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.