India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றது. இதில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் அந்த இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

விராலிமலை அடுத்த கொடும்பலூரை சேர்ந்த தம்பதி பழனிச்சாமி( 69), அழகம்மாள் (54 ). இருவரும் கொடும்பலூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அவரது மகன் சிவசக்தி வேல் (33) அளித்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்மறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

கீரமங்கலம் மேற்கு பேட்டை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அப்துல் ஜபார் மனைவி பிச்சையம்மாள். இவர் தனது குடும்ப வருமானத்திற்காக கடந்த ஒரு வருடமாக 9 செம்மறி ஆட்டுக்குட்டிகளை வாங்கி வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஆடுகளை வீட்டில் கட்டி வைத்துள்ளார். இன்று காலை வெறி நாய்களால் கடிபட்டு, தோல் கிழிந்து, குடல் வெளியே வந்தும் ஆடுகள் இறந்து கிடப்பதை அவர் பார்த்து கதறி அழுதார்.

புதுக்கோட்டையில் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண் பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த உடல் கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

திருச்சி ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதுக்கோட்டை வழியாக காரைக்குடி – திருச்சி இடையே இயக்கப்படும் டெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியிலிருந்து காலை 9:40 மணிக்கு திருச்சி புறப்படும் ரயில் (வண்டி எண்06888) நாளை (புதன்கிழமை) முதல் 21ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னர்களால் கிழக்கிந்திய கம்பெனியின் பார்வைக்காக 1813 இல் ஓர் புள்ளிவிவரக் கணக்கு பனை ஓலையில் தயாரிக்கப்பட்டது. இத்தொகுப்பு 1625 ஏடுகளை கொண்டது. இது தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் உள்ளது. இதில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குள் கண்ட கிராம வாரியான புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. Way2News “காலச்சுவடு” தொடரும்..

அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் வட்டம் மற்றும் சரகம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 13ம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 05.11.2024 அன்று முதல் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் புண்ணியவயல் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெறவுள்ளதால் பொதுமக்கள் மனுக்களை வழங்குமாறு ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.

விராலிமலையை அடுத்துள்ள கசவனூர் வடக்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(59). கட்டடத் தொழிலாளி. இவர் நேற்று மாலை கொடும்பாளூர் கசவனூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விராலிமலை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலுப்பூர், புங்கினிப்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (39) இவர் இலுப்பூரில் உள்ள டீ கடை ஒன்றில் டீ குடித்துவிட்டு நடந்து சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது இதில் படுகாயம் அடைந்த குமரேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இதுகுறித்து போலீசார் நத்தம்பண்ணையை சேர்ந்த புகழேந்தி என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.