India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆலங்குடி பேரூராட்சியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் நீடித்து வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் அரசு மருத்துவமனை அருகே தினம் வாகன ஓட்டிகள் குழந்தைகள் பெரியவர்கள் வரை மற்றும் ஆடு மாடுகள் கடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை தொடர்கிறது. இன்று ஆட்டு குட்டியை நாய்கள் கூட்டமாக வந்து கடித்து குதறியது இதனை மக்கள் அச்சத்துடன் பார்த்து நிர்வாகத்திடம் புகார் செய்கின்றனர்.
பொன்னமராவதி அருகே, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் கேசம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா (75). இவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பொன்னமராவதி வந்த இவர் சுமை ஆட்டோ நிறுத்தம் அருகே உள்ள மரத்தின் கீழ் விஷத்தை குடித்து இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் சின்னையாவின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று திடீரென்று பலத்த காற்றுடன் கனமழை அரை மணி நேரமாக பெய்தது. கனமழை காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கோடை மழையால் காய்ந்த புற்கள் மீண்டும் பசுமையாகும் என கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமயம் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் மாணவர்கள் கோடை விடுமுறையை கழிக்க கூட்டாஞ்சோறு என்னும் பழங்கால முறையை கடைபிடித்தனர். இதில் மேலூர் இளைஞர்கள் இணைந்து பிரியாணி செய்தனர். இதனை அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து மகிழ்ச்சியாக உண்டனர். மேலும் மிஞ்சிய சோற்றை பசியில் வேலை செய்து கொண்டிருக்கும் ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.
கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் மர்மக்காய்ச்சலால் இளம்பெண் இறந்ததையடுத்து புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மணிமாறன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று அங்கு ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் பரிசோதனை,ரத்தமாதிரிகளை ஆய்வு செய்து கிராம மக்களுக்கு எந்த காய்ச்சலும் இல்லை.பீதியடைய வேண்டாம் என தெரிவித்தார்.
புதுகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வந்திதா பாண்டேவின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் அன்னவாசல், விராலிமலை, காரையூர் மற்றும் இலுப்பூர் ஆகிய காவல் சரகத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு வெவ்வேறு இடங்களில் திருடிய 4 திருடர்களை கைது செய்து அவரிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டையில் குளத்தூர் அருகே அமைந்துள்ள குடுமியான்மலையில் குடுமிநாதர் கோயிலும், குடைவரையும், அதனருகில் இசைக்கல்வெட்டும் உள்ளது. இதில் பழங்கால வரலாறு மற்றும் கலைகளைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் சிலவை, மாலிக் காபூரின் படையெடுப்பில் சிதிலமடைந்துள்ளன. இசைக்கல்வெட்டு கிபி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் இதன் இசை நுணுக்கங்கள் முற்றுமாய் ஆய்வு செய்யப்படவில்லை.
மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விடுத்துள்ள அறிவிப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை (மே.31) காலை 11 மணிக்கு தொடங்குகிறது.இதில் போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, திருமயத்தில் உள்ள புகழ்பெற்ற குடைவரைக் கோயிலான சிவன்கோயிலுக்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து வழிபட்டார். வழிபட வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை, திருமயம் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் கண்ணனூர். முருகேசன் வரவேற்றார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். திருமயம் பகுதியில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டது.
திருமயத்தில் அமைந்துள்ள பைரவர் கோயில் அதன் அருகே அமைந்துள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் இன்று மலை அமித்ஷா தரிசனம் செய்தார். இதையடுத்து மீண்டும் திருச்சிக்கு வந்து மாலை 5.25 மணிக்கு தனி விமானத்தில் திருப்பதி செல்கிறார்.திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.