Pudukkottai

News July 16, 2024

குறைதீர்க்கும் கூட்டம் 403 மனுக்கள் குவிந்தன

image

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை,வேலை வாய்ப்பு,பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

21 தாசில்தாரர்கள் பணியிட மாற்றம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாசில்தாரர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் 21 பேரை பணியிட மாற்றம் செய்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா இன்று உத்தரவிட்டடார். நிர்வாக காரணங்களுக்காக வருவாய்த்துறையில் 21 தாசில்தாரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News July 15, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

காமராஜர் பிறந்தநாள் விழா; அமைச்சர் மரியாதை

image

கர்மவீரர் காமராஜரின் 122-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கும், படத்திற்கும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மாநகர திமுக செயலாளர் ஆ.செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

போக்சோவில் ஒருவர் கைது

image

ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் நேற்று அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

News July 15, 2024

புதுக்கோட்டையில் 227 பேர் நுழைவுத்தேர்வு எழுதினர்

image

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி பணி, ரயில்வே பணி ஆகிய போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்ச்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு நேற்று புதுக்கோட்டையில் 2 மையங்களில் நடைபெற்றது. இதில் தேர்வு எழுத 344 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 227 பேர் தேர்வு எழுதினர். 117 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு போட்டிதேர்வுக்கான இலவச பயிற்ச்சி அளிக்கப்பட உள்ளது.

News July 14, 2024

துரை என்கவுண்டர்; விசாரணை அதிகாரி நியமனம்

image

புதுக்கோட்டை வம்பன் காட்டுபகுதியில் பிரபல ரவுடி துரை என்பவர் காவல்துறை நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உடற்கூறாய்விற்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் நீதி விசாரணை வேண்டும் என துரையின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க கோட்டாட்சியர் ஐஸ்வர்யாவை நியமித்து ஆட்சியர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார்.

News July 14, 2024

வீட்டு வரியை திரும்ப பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடு அறிக்கையில் அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் வீட்டுவரித் தொகையினை நீட்டிப்பு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் செலுத்திய வீட்டு வரித் தொகையினை மீளப்பெற வீட்டுவரி செலுத்திய 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

புதுக்கோட்டையில் பரவிய மஞ்சள் காமாலை 

image

அன்னவாசல் அருகே வயலோகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ- மாணவிகள் 15க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வயலோகத்தில் இன்று சித்தமருத்துவ முகாம் நடந்தது. இதில் குடுமியான்மலை சித்த மருத்துவர் அமுதமீனா கலந்துகொண்டு மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பலருக்கு சிகிச்சை அளித்தனர். 

error: Content is protected !!