India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைதேடும் படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் காளிதாஸ் குழுவினர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக புதுகை மச்சுவாடி பகுதியில் ஆய்வு செய்யும் போது புதுக்கோட்டை சீமை, ஸ்டேட், சமஸ்தானம், என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் பழைய பெயர் கலசமங்கலம் அல்லது கலசகாடு என்பதாகும். இந்நிலையில் நகர எல்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ‘புதுக்கோட்டை எல்லை கல்’ எழுதப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

புதுக்கோட்டை பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரால் ஒவ்வொரு மாதமும் நுகர்வோர் கூட்டம் நடைபெறும், அவ்வகையில் புதுக்கோட்டையில் மாதந்தோறும் முதல் வியாழக்கிழமை, கீரனூரில் இரண்டாவது வியாழக்கிழமை, அறந்தாங்கி மூன்றாவது வியாழக்கிழமை, திருமயம் நான்காவது வியாழக்கிழமை, ஆலங்குடி மூன்றாவது செவ்வாய்க்கிழமையும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இலுப்பூர், கூவாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலிவேலை செய்துவரும் இவர் அப்பகுதி இடுகாட்டில் நேற்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அரளை கல்லால் தாக்கப்பட்டதில் கனகராஜ் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் இலுப்பூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி பூனையின் தெருவில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (20.11.2024) நடைபெற்ற அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சி, அய்யனார்கோவில், காட்டுகொல்லை குடியிருப்பு பகுதியில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பெய்த கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரினை, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (19.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் திருநாளூர் வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 206.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 7 வகுப்பறையுடன் கூடிய கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, கீரமங்கலம் பேரூராட்சி மேலக்காடு முஸ்லிம் ஜமாத்தார்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் தனியாக தொழுகை நடத்துவதற்கு ஏதுவாக செட் அமைப்பதற்கான இடத்தை, தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி ஒன்றியக்குழு மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கிண்டியில் மருத்துவர் தாக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என நடத்திய போராட்டத்தின் எதிரொலியால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவின் மூலம் காவலர்கள், நோயாளிகளையும், பொதுமக்களையும் சோதனை செய்த பின்னர் அனுமதித்து வருகின்றனர். இது மருத்துவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.