India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மக்களவை தொகுதியில் புதுகை மண்ணின் மைந்தரும் அதிமுக வேட்பாளருமான கருப்பையா 1,14,794 வாக்குகள் பெற்று தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார். திருச்சி தொகுதியில் அதிமுகவினர் நம்பிக்கையை பெற்றாலும் தோல்வியை தழுவும் நிலையில் உள்ளதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் மையத்தை விட்டு அதிமுக முகவர்கள் வெளியேறினர்.
கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1,54,167 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தங்கவேல் 1, 13, 897 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருச்சி மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,77, 603 வாக்குகள் பெற்று 97,914 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 79, 689 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 39,176 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 35,449 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருச்சி மக்களவை தொகுதியில் மொத்த வாக்குகள் 12.30 மணி நேர நிலவரம்: 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதிமுக – துரை வைகோ – 145883, அதிமுக – கருப்பையா – 66,738, அமமுக – செந்தில்நாதன் – 30,985, நாதக – ராஜேஷ் – 30,335 வாக்குகள் பெற்றுள்ளனர். 79,145 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளடக்கிய (கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை) திருச்சி தொகுதியில் 11.55 மணி நிலவரப்படி மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,24,648 வாக்குகள் பெற்று 66,733 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 57,915 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் 23,588 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 26,285 வாக்குகள் பெற்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளை (ஆலங்குடி, திருமயம்) உள்ளடக்கிய சிவகங்கை தொகுதியில் 3ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் 25 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்., 60,839 வாக்குகளும், அதிமுக 34,307 வாக்குகளும், பாஜக 23,433 வாக்குகள் பெற்றுள்ளனர்.
திருச்சி மக்களவை தொகுதியில் 11 மணி நிலவரப்படி மதிமுக வேட்பாளர் துரை வைகோ 74,475 வாக்குகள் பெற்று 38,705 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 35,770 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 13,052 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 17,083 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருச்சி மக்களவை தொகுதியின் 2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், மதிமுக வேட்பாளர் துரை வைகோ 24,135 வாக்குகள் பெற்று 11,940 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 12,195 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். அமமுக செந்தில்நாதன் 4205 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 5,601 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஆலங்குடி அருகே நெம்மலிபட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன் (22). இவர் நேற்று தனது காரில்
பெருங்களூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தனபால் என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ்சும், காரும் எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.