India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டையில் நேற்று சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டி- ‘கோயில்களை இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது எழுகிறது. அறநிலையத்துறையை எடுத்து விட்டால் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை யாரிடம் கொடுப்பது, எந்தக்குழுவிடம் கொடுப்பது, அவர்கள் யாரையெல்லாம் கோயிலுக்குள் விடுவார்கள். அம்பேத்கரும் பெரியாரும் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகிவிடும்’ என்றார்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை புதுகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் நோயால் இறந்தோரை நினைவு கூறும் சர்வதேச எய்ட்ஸ் மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்ச்சி புதுகை மாவட்ட எச்ஐவியுடன் வாழ்வோர் கூட்டமைப்பின் தலைவர் ராமசாமி தலைமையில் நேற்று(ஜூன் 15)நடைபெற்றது. இதில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மேற்பார்வையாளர் ஜெயக்குமார், மேலாளர் கோபால், பாவை அறக்கட்டளையின் சத்யபிரியா, மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் பேரா சா.விஸ்வநாதன்,செயலர் பழனியப்பா கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வருகின்ற 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளான பத்ம விபூசன், பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தகுதியானவர்கள் வரும் 21ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணபிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 04322 222270 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் இருப்பவர் தெய்வநாயகி. இவரின் உதவியாளர் ராஜேந்திரன் டிரைவர் கனகபாண்டியன் இவர்கள் மூவரும் ஒரு காரில் நேற்று முன்தினம் மணல் கடத்துவதாக வந்த தகவலை ஆய்வு செய்தபோது மணல் கடத்தி வந்த மினிலாரி ஆர்டிஒ காரில் மோதி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.இதில் ஆர்டிஒ கார் சேதமடைந்தது.மூவரும் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.இதுகுறித்து நேற்று அன்னவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
புதுக்கோட்டை வருமான வரித்துறை அலுவலகம் சார்பில் நேற்று வருமானவரி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் வருமானவரி அலுவலர்கள் பி.சதீஷ்குமார், ஆர்.சுரேஷ்குமார் கலந்து கொண்டு முன்கூட்டியே வருமானவரி செலுத்துவதன் அவசியம், சலுகைகள் குறித்தும், இணையவழியில் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வது குறித்தும் விளக்கி கூறினர். இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள், வருமானவரித் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உரங்களை அதிக
விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மொத்த விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என தெரிவித்தார்
திருச்சி மாவட்டம், மணப்பாறை
கே. உடையார்பட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் விராலிமலை- மதுரை சாலை காணியாளம்பட்டி பிரிவு அருகே இரும்பு கட்டில், பீரோ தயாரிக்கும் தனியா தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி பணியின் போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சகத்தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த நிலையில் 12-ந்தேதி உயிரிழந்தார்
தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தைத் தூண்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா்
காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிலமெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல கிராமங்களில் பிரச்னைகள் வருவதால் மக்களை சமாதானப்படுத்தி, நிலமெடுக்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன.
புதுகை சட்டமன்ற தொகுதி கவிநாடு மேற்கு கவிநாடு கம்மாயில் சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தலைமை வகிக்க ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.