India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மக்களவை தொகுதியின் 2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், மதிமுக வேட்பாளர் துரை வைகோ 24,135 வாக்குகள் பெற்று 11,940 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 12,195 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். அமமுக செந்தில்நாதன் 4205 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 5,601 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஆலங்குடி அருகே நெம்மலிபட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன் (22). இவர் நேற்று தனது காரில்
பெருங்களூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தனபால் என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ்சும், காரும் எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
ஆலங்குடி பேரூராட்சியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் நீடித்து வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் அரசு மருத்துவமனை அருகே தினம் வாகன ஓட்டிகள் குழந்தைகள் பெரியவர்கள் வரை மற்றும் ஆடு மாடுகள் கடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை தொடர்கிறது. இன்று ஆட்டு குட்டியை நாய்கள் கூட்டமாக வந்து கடித்து குதறியது இதனை மக்கள் அச்சத்துடன் பார்த்து நிர்வாகத்திடம் புகார் செய்கின்றனர்.
பொன்னமராவதி அருகே, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் கேசம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா (75). இவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பொன்னமராவதி வந்த இவர் சுமை ஆட்டோ நிறுத்தம் அருகே உள்ள மரத்தின் கீழ் விஷத்தை குடித்து இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் சின்னையாவின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று திடீரென்று பலத்த காற்றுடன் கனமழை அரை மணி நேரமாக பெய்தது. கனமழை காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கோடை மழையால் காய்ந்த புற்கள் மீண்டும் பசுமையாகும் என கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமயம் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் மாணவர்கள் கோடை விடுமுறையை கழிக்க கூட்டாஞ்சோறு என்னும் பழங்கால முறையை கடைபிடித்தனர். இதில் மேலூர் இளைஞர்கள் இணைந்து பிரியாணி செய்தனர். இதனை அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து மகிழ்ச்சியாக உண்டனர். மேலும் மிஞ்சிய சோற்றை பசியில் வேலை செய்து கொண்டிருக்கும் ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.
கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் மர்மக்காய்ச்சலால் இளம்பெண் இறந்ததையடுத்து புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மணிமாறன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று அங்கு ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் பரிசோதனை,ரத்தமாதிரிகளை ஆய்வு செய்து கிராம மக்களுக்கு எந்த காய்ச்சலும் இல்லை.பீதியடைய வேண்டாம் என தெரிவித்தார்.
புதுகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வந்திதா பாண்டேவின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் அன்னவாசல், விராலிமலை, காரையூர் மற்றும் இலுப்பூர் ஆகிய காவல் சரகத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு வெவ்வேறு இடங்களில் திருடிய 4 திருடர்களை கைது செய்து அவரிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டையில் குளத்தூர் அருகே அமைந்துள்ள குடுமியான்மலையில் குடுமிநாதர் கோயிலும், குடைவரையும், அதனருகில் இசைக்கல்வெட்டும் உள்ளது. இதில் பழங்கால வரலாறு மற்றும் கலைகளைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் சிலவை, மாலிக் காபூரின் படையெடுப்பில் சிதிலமடைந்துள்ளன. இசைக்கல்வெட்டு கிபி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் இதன் இசை நுணுக்கங்கள் முற்றுமாய் ஆய்வு செய்யப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.