India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் TN55 06 06 என்ற என் கொண்ட அரசு பேருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே திருச்சி சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இலுப்பூர் அருகே 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆற்றுப்படுத்துனர் ராம பிரியா விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமிக்கு பாக்கியராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதாக தெரியவந்தது. இதையடுத்து பாக்கியராஜ், பழனிகண்ணு, அகிலா, தனலட்சுமி ஆகிய நான்கு பேர் மீது இலுப்பூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அன்னவாசல் அருகே உள்ள பணம்பட்டி பகுதியில் பொது இடத்தில் சீட்டு கட்டுகளை வைத்து சூதாடுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பணம்பட்டி சுடுகாடு பகுதியில் வைத்து சூதாட்டம் விளையாடிய முருகேசன், ராஜா (36) பாலா, (25) சதாசிவம் (42) ஆரோக்கியசாமி (44) விஜயக்குமார் (32) கவாஸ்கர் (40) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) மாணவ மாணவியர்களுக்கான (2024-2025) ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. உதவி இயக்குனர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் புதுக்கோட்டை அலுவலத்தில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்: 04322 299382 செல் : 9487447179, 9750170290

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள், பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கறம்பக்குடி காவல் புளியஞ்சோலை கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பார்வையிட்டு கொலை செய்த குற்றவாளியை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு 48 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து 2 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் அருணா நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார். இதில் ஒரு கோடியே 82 லட்சத்து 95 ஆயிரத்து 133 ரூபாய் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் மாவட்ட துணைத்தலைவர் கர்னல் (ஓய்வு) அருட்செல்வம், உதவி இயக்குனர் கேப்டன் விஜயகுமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுப்பெயர் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில், முதல் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகம் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி புதுக்கோட்டையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் இணையதள முகவரியில் வரும் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக சமூக நலன் மற்றும் உரிமை துறை சார்பில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். இதில் தமிழ் புதல்வன் முதன்மைப் பெண் திட்டத்தில் புதுக்கோட்டையில் 17,392 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுகையில் நேற்று திருநங்கைகளுக்கான மாதாந்திர சிறப்பு குறை தீர்ப்புக் கூட்டம் கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. இதில் வீட்டுமனைப்பட்டா, சிறு தொழில் கடன் உள்ளிட்டவை குறித்து இதில் பங்கேற்ற 60 திருநங்கைகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதிகாரிகளிடம் கலந்து பேசி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். இதில் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.