Pudukkottai

News June 21, 2024

புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வருகின்ற ஜூன் 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்துதுறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உள்ளதால் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு, தனியார்துறையில் பணியமர்த்த செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிளான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணியளவில் புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

News June 20, 2024

புதுகை: மது விற்பனை குறித்த ஆய்வு கூட்டம்!

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் மது அருந்துதல் குறித்து, சிறப்பு ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

News June 19, 2024

புதுக்கோட்டை:மீனவர்கள் 4 பேர் கைது 

image

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 241 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்க திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா். எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த 4 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்தனா். அவா்களைக் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனா்.

News June 19, 2024

புதுக்கோட்டையில் ஜமாபந்தி தொடங்கியது

image

புதுகை மாவட்டத்தில் 1433 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று தொடங்கியது. புதுகை வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய்த்துறையினரின் நிலஅளவைக் கருவிகள், சங்கிலிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை ஆட்சியர் மெர்சி ரம்யா பார்வையிட்டார். அப்போது
நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் பரணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News June 18, 2024

புதுகை எம்எல்ஏ பொதுமக்களை சந்தித்தார்!

image

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை சந்தித்தார்.இந்த சந்திப்பில் பொதுமக்கள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.அந்த மனுக்களை பெற்று கொண்ட புதுகை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா விரைவில் தங்களது கோரிக்கைகளை ஆய்வு செய்து தீர்வு செய்யப்படும் என கூறினார்.

News June 18, 2024

புதுக்கோட்டை: 4 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படை

image

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து நேற்று(ஜூன் 17) 241 விசைப்படகுகளில் 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களில் சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற சிபிராஜ், பாலச்சந்திரன், சாரதி, ராமதாஸ் ஆகியோர் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்துச் சென்றனர்.

News June 17, 2024

புதுக்கோட்டை நகர் பகுதியில் மழை!

image

புதுக்கோட்டை நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை நகரப் பகுதியில் இன்று திங்கட்கிழமை இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையினால் சாலையில் மழை நீர் ஆறு போல் ஓடியது. இந்த கன மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 17, 2024

வேங்கைவயல் விவகாரம்.. வெளியான தகவல்

image

வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து விசாரணை நடத்தியதோடு, சோதனையும் நடத்தினர்.இருப்பினும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் சென்றது.இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய அறிவியல் ரீதியான விசாரணையில், குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News June 17, 2024

 சிறப்பு மக்கள் நீதிமன்றம்: தீா்வு காண அழைப்பு

image

இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைவான தீா்வு பெறுவதற்காக சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் ஜூலை 29 முதல் ஆக.3 வரை நடைபெறவுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தோரின் வழக்குகளையும் காணொலிக் காட்சி மூலம் சமரசத் தீா்வு காண மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

error: Content is protected !!