India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகாரத்தை இழந்த நிலையில் மக்களின் இயல்பு நிலையில் வெயிலின் பாதிப்பால் மோசமான சூழ்நிலையில் இருந்த பொழுது தற்பொழுது மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்ததால் இந்த மலையானது மக்களுக்கு குளிர்ச்சியான சூழ்நிலையில் தருவதால் புதுகை மக்கள் மகிழ்ச்சியுடன் வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளு என காலநிலையில் உள்ளனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மாலை முதல் (05.06.2024) புதுக்கோட்டை சுற்று வட்டாரப்பகுதிகளில் இடி மின்னல், காற்றுடன் லேசானது முதல் சாரல் மழை பெய்ந்து வருகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை 9 ஏ நத்தம் பண்ணை பகுதியை சேர்ந்தவர் ஆண்டனிசாம்.நேற்று மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சத்தியமூர்த்தி சாலையில் சென்றபோது ஆட்டோவில் மோட்டார்சைக்கிள் மோதியது இதில் படுகாயமடைந்த ஆண்டனிசாம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
டவுன் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை
திருச்சி மக்களவை தொகுதி தேர்தலில், மதிமுக வேட்பாளர் துரைவைகோ, 3,11,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.மொத்தம்,25 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மொத்தம்,5,38,408 வாக்குகளை துரை வைகோ பெற்று இருக்கிறார்.அதிமுக வேட்பாளர் கருப்பையா 227326 வாக்குகள் பெற்று 2ம் இடம் பெற்றுள்ளார்.நாதக வேட்பாளர் ராஜேஷ் 106676 வாக்குகள் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் 99453 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மாலை 4மணி நேர நிலவரப்படி, 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில், திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துரை வைகோ – 372733, அதிமுக – கருப்பையா – 153527, அமமுக – செந்தில்நாதன் – 72627, நா.த.க – ராஜேஷ் – 70674, 2,19,206 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறார்.
திருச்சி மக்களவை தொகுதியில் புதுகை மண்ணின் மைந்தரும் அதிமுக வேட்பாளருமான கருப்பையா 1,14,794 வாக்குகள் பெற்று தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார். திருச்சி தொகுதியில் அதிமுகவினர் நம்பிக்கையை பெற்றாலும் தோல்வியை தழுவும் நிலையில் உள்ளதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் மையத்தை விட்டு அதிமுக முகவர்கள் வெளியேறினர்.
கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1,54,167 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தங்கவேல் 1, 13, 897 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருச்சி மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,77, 603 வாக்குகள் பெற்று 97,914 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 79, 689 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 39,176 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 35,449 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருச்சி மக்களவை தொகுதியில் மொத்த வாக்குகள் 12.30 மணி நேர நிலவரம்: 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதிமுக – துரை வைகோ – 145883, அதிமுக – கருப்பையா – 66,738, அமமுக – செந்தில்நாதன் – 30,985, நாதக – ராஜேஷ் – 30,335 வாக்குகள் பெற்றுள்ளனர். 79,145 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளடக்கிய (கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை) திருச்சி தொகுதியில் 11.55 மணி நிலவரப்படி மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,24,648 வாக்குகள் பெற்று 66,733 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 57,915 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் 23,588 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 26,285 வாக்குகள் பெற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.