India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகையில் நாளை (டிச.14) ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெறுகிறது. இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு 044 28888060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காலை 6:30 முதல் மதியம் 2 மணி நிலவரப்படி நேரத்தில் 515.20 மி.மீ மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை முதல் அங்கு நல்ல மழை பெய்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களுக்கு 1077 மற்றும் 04322-222207 என்ற எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (டிச.12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராஜகோபாலபுரம், பூங்கா நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், கவிநாடு, பெருமாநாடு, திருவரங்குளம், நச்சாந்துபட்டி, நமண சமுத்திரம், கடையக்குடி, லெணாவிளக்கு, பெருஞ்சுனை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜி.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (டிச.12) அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா சற்று முன் அறிவித்துள்ளார். தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அநேக இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஷேர் செய்யவும்

புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வடகிழக்கு பரவ மழை முன்னிட்டு செயல்பட்டு வரும் மழைக்கால அவசர கட்டுப்பாட்டு அறையில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுந்தரவல்லி மற்றும் மாவட்ட ஆட்சி அருணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கரூர், பசுபதி பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் குடும்பத்துடன் புதுகை நரிமேடு பகுதியில் வசித்து வருகிறார். அவர் நேற்று இரவு 8:45 மணிக்கு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டின் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி அளித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முழுமைக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் 1,900 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று காலை 10 மணியளவில் உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினை துவக்கி வைக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.