India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நால்வர் உலாவில் சிறுவர் சிறுமியர் 63 நாயன்மார்கள் வேடமணிந்து பங்கேற்றனர். சேக்கிழார், திருஞானசம்பந்தர் அப்பூதியடிகள்,,கண்ணப்பர் இசைஞானியார்,என 63 நாயன்மார்கள் வேடமணிந்து சிவாயநமஹ முழக்கத்துடன் பங்கேற்றனர். இக்காட்சி காண்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.

வடக்கு தொகுப்பு பட்டி கிராமத்தில் கவிதா 27 நிறைமாத கர்ப்பிணிக்கு இன்று காலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுகை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வலி அதிகமானதாக ஆம்புலன்ஸை ஓரமாக நிறுத்தி, அவசரகால மருத்துவ நுட்புனர் ரெங்கராஜ் பிரசவம் பார்த்தார் 04: 35 மணி அளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

அண்ணாபண்ணை, அன்னவாசல், கறம்பக்குடி, திருமயம், விராச்சிலை, ராயவரம், புதுக்கோட்டை சிப்காட் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (டிச.21) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஆதனக்கோட்டை அருகே சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகன்கள் உள்ளன. இந்நிலையில் சரவணன் பெருங்களூர் பகுதியில் உள்ள தைலம் மரக்காட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அண்ணாபண்ணை, அன்னவாசல், கறம்பக்குடி, திருமயம், விராச்சிலை, ராயவரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (டிச.21) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலுர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

ஆவுடையார்கோவில் வட்டம் ஒக்கூரில் அறந்தாங்கி அரசுக்கலை கல்லூரி தமிழ்துறை தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான கா.காளிதாஸ், பேராசிரியர் மணிவண்ணன், ஆசிரியர் ஆ.செல்வராஜ் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இடிந்து அழிந்த நிலையில் குலோத்துங்க சோழன் காலத்து (கிபி1115-1116) சிவன்கோயில், சோழர் பாணியில் உள்ள நந்தி ஆகியவற்றை கண்டெடுத்தனர்.

புதுக்கோட்டை சிப்காட் துனை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 21 ஆம் தேதி இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் தாவுது மில் சிட்கோ தொழில் பேட்டை, முள்ளூர், இச்சடி, புத்தாம்பூர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், அகிலா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கந்தர்வக்கோட்டையில் இந்திய அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 2024-25 பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறுகிறது. டிச.31 கடைசி நாள் ஆகும். சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இங்குசி.என்.சி. டெக்னீசியன், சென்ட்ரல் ஏசி மெக்கானிக், சர்வேயர் இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது என்று ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

கீரமங்கலம் பால் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆவின் பால் தொகுப்பு பால் புதிய குளிர்விப்பு மையத்தினையும், மற்றும் 10 மணியளவில் நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரு வகுப்பறை கொண்ட புதிய வகுப்பறை கட்டடத்தினையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைக்க வைக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் டிசம்பர் 24 ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20:12:24-ம் நாளை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். இதில் விவசாயிகளுக்கு தேவையான குறைகளை முன் வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.