Pudukkottai

News June 27, 2024

சனிக்கிழமை வேலை நாளை கைவிட வேண்டும் என கோரிக்கை

image

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக உள்ள எமிஸ் பதிவு தொடர்பான எந்த வேலையையும் ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது. காப்பீட்டில் அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும். பள்ளி வேலை நாட்களை சனிக்கிழமைகளில் கூடுதல் வேலை நாளாக சேர்க்கப்பட்டுள்ளதைக் கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News June 27, 2024

விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அறிவுரை

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் சிறார் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 14 வழக்குகளில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மொர்சி ரம்யா அறிவுறுத்தியுள்ளார்.

News June 27, 2024

குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மூலம், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யா தேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News June 26, 2024

குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மூலம், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யா தேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News June 26, 2024

சிறப்பு மனு முகாமில் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை!

image

புதுகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகம், மற்றும் அனைத்து உட்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இன்று ( 26-06-2024 ) சிறப்பு மனு முகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த மனு முகாமில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்தனர்.

News June 26, 2024

சிறப்பு கிராம சபைக் கூட்டம் அறிவிப்பு!

image

தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி
சிறப்பு கிராம சபைக் கூட்டம் 28.06.2024-ம் தேதியன்று காலை 11 மணிக்கு புதுகை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது

image

புதுகை மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் ஏராளமான முன்னாள் படை வீரர்கள் தங்கள் மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யா தேவியிடம் வழங்கினார்கள்.

News June 26, 2024

புதுகை: போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

image

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதுகை, மாவட்ட காவல் துறை நடத்தும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து பிரசார இயக்கம் மற்றும் அணிவகுப்பு பேரணியை இன்று 26.06.2024-ம் தேதி பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

News June 26, 2024

அன்னவாசல் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா இன்று நேரில் சந்தித்தார். உடன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, இருக்கை மருத்துவ அலுவலர் மரு.இந்திராணி, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News June 25, 2024

புதுகை: பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்!

image

புதுகையில் இருந்து தனியார் பேருந்து ஒன்று இன்று மணப்பாறை, அன்னவாசல் அருகே சென்றபோது, பேருந்தின் முன்பகுதி டயர் வெடித்ததில் பலத்த சத்தத்துடன் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த இளைஞர்கள் பயணிகளை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!