India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வாசவாசல், முள்ளூர், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9 ஏ நத்தம் பண்ணை, 9 பி நத்தம் பண்ணை ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. மேலும், மாநகராட்சியின் பரப்பளவு 121 சதுர கி.மீ, மக்கள் தொகை 2.16 லட்சம் மற்றும் ஆண்டு வருவாயாக ரூ.64.21 கோடி கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்வு நடைபெறுகிறது. இதற்கு திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் ஜூலை 8 முதல் ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வில் பங்கேற்று மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெற்ற 11 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் மாறுதல் ஆணைகளை நேற்று வழங்கினார். இந்த கலந்தாய்வை கண்காணிப்பாளர் சங்கரநாராயணன், இருக்கைப் பணி கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டனர்.
புதுகை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; முள்ளங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆங்கிலம், இயற்பியல் ஆசிரியர் பணியிடங்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்காலிகமான இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு ஜூலை 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆக. 31 வரை தீவிர வயிற்றுப்போக்குத் தடுப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு தான் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.எனவே 2025ஆம் ஆண்டுக்குள் இந்த இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்புகளுக்கு 10ஆக குறைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் இலக்கு என கூறினார்.
முதல்வரின் முகவரித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் மக்களுடன் முதல்வா் என்ற சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 497 கிராம ஊராட்சிகளை இணைத்து 66 இடங்களில் ஜூலை 11 அன்று ‘மக்களுடன் முதல்வா்’திட்ட முகாம்கள் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் முகவரித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் மக்களுடன் முதல்வா் என்ற சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 497 கிராம ஊராட்சிகளை இணைத்து 66 இடங்களில் ஜூலை 11 அன்று ‘மக்களுடன் முதல்வா்’திட்ட முகாம்கள் நடைபெறுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுகை, நரிமேடு வசந்தபுரி நகரில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார். குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் 12 முதல் 25 வயதுக்குட்பட்ட இருபாலரும் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.350 பயிற்சியின் முடிவில் அரசின் சான்றிதழ் வழங்கப்படும். சேர விரும்புவோா் 04322 225575, 94861 52007 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், ”முதல்வரின் முகவரி” துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களை நடத்துவது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், ”முதல்வரின் முகவரி” துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களை நடத்துவது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.