Pudukkottai

News July 5, 2024

புதுகை: ஜவுளிப்பூங்கா அமைக்க அழைப்பு

image

புதுக்கோட்டையில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின்கீழ் தொழில் முனைவோர்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ 2.50 கோடி இதில் எது குறைவானதோ அது அரசின் மானியமாக வழங்கப்படுகிறது. ஜுலை 18 இல் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரங்கில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 04324-299544, 7397556156 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

புதுக்கோட்டை இளைஞர்களே யூஸ் பண்ணிக்கோங்க

image

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்டம் இணைந்து நடத்தும் அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 7ம் தேதி தொடங்குகிறது. இதில் சேர விரும்புவோர் 9786441417, 9445955451, 9943832324 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தன்னார்வ பயிலும் வட்ட ஒருங்கிணைப்பாளர் பா.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்க அனுமதி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய பணி மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்கு நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 511 கண்மாய் மற்றும் குளங்களில் வண்டல் மண் , களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று அறிவித்துள்ளார்.

News July 4, 2024

புதுக்கோட்டை: மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

image

தமிழ்நாடு மின்வாரிய புதுக்கோட்டை மின் வட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் இன்று (ஜூலை 4) காலை 10.30 மணிமுதல் பகல் 1 மணிவரை மேற்பார்வை பொறியாளர் த.அசோக்குமார் தலைமையில் நடைபெறுகிறது. இதில், புதுக்கோட்டை, இலுப்பூர், கந்தர்வகோட்டை பகுதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளை எழுத்துப்பூர்வமாக அளித்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News July 3, 2024

புதுக்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான்

image

சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தின பேரணி புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது.  இதனையொட்டி, தனியார் பள்ளி மாணவர்களின் மாரத்தான் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர். 

News July 3, 2024

புதுக்கோட்டையில் புத்தக திருவிழா

image

புதுக்கோட்டையில் 7வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமை வகித்து புதுக்கோட்டை புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் மன்னர் கல்லுாரி விளையாட்டு திடலில் நடைபெறும்” என்றார்.

News July 2, 2024

புதுக்கோட்டை : இலவச பயிற்சி வகுப்புகள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் தொடங்க உள்ளது. இந்த வகுப்பில் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

ஜல் ஜீவன் மிஷன் திட்டம்: ஆட்சியர் ஆய்வு

image

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், மழையூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

News July 2, 2024

14ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு

image

குளத்தூா் அருகே பெரம்பூா் கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொடை அளித்ததற்கான இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பெரம்பூா் ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் கல்வெட்டுப் பலகை ஒன்று இருப்பதாக பிரணவ காா்த்திக் என்பவா் அளித்த தகவலின்பேரில், தொல்லியல் ஆய்வாளா் முத்தழகன் தலைமையில் தொல்லியல் ஆா்வலா்கள் முருகபிரசாத், நாராயண மூா்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

News July 1, 2024

திமிங்கலத்தின் தாடை அருங்காட்சியத்தில் வைப்பு

image

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால கற்சிலைகள், மரசிற்பங்கள் , ஓவியங்கள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், மன்னர் காலத்து பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே மணமேல்குடி அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் புதைக்கப்பட்ட நிலையில், அதன் தாடை மற்றும் எலும்புகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அருங்காட்சியக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!