Pudukkottai

News July 23, 2024

வரும் 26-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த (ஜூலை) மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் அருணா தகவல் தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு

image

புதுக்கோட்டை வையாபுரிப்பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கீழப்பனையூர் VAO காயத்ரி அரிமளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். இறந்து 4 நாள் இருக்கலாம் என்பதால் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகி காணப்பட்டது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடைபெறுகிறது.

News July 23, 2024

புதுகை குறைதீர் நாள் கூட்டத்தில் 501 மனுக்கள்

image

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் நேற்று(ஜூலை 22) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 18 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.72 லட்சம் மதிப்பில் உபகரணங்களை கலெக்டர் அருணா வழங்கினார். பொதுமக்களிடமிருந்து 501 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, தனித்துணை ஆட்சியர் ஷோபா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News July 22, 2024

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்; அமைச்சர்

image

புதுக்கோட்டையில் நேற்றிரவு அமைச்சர் எஸ்.ரகுபதி அளித்த பேட்டியில், வரும் 2026-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்றார். நிதி பங்கீட்டில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்க்கு அளிக்கும் நிதி பங்கீடு,பிற மாநிலங்களுக்கு அளிக்கும் நிதி பங்கீட்டை ஒப்பிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

News July 22, 2024

புதுக்கோட்டை:மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (22.07.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News July 22, 2024

புதுகை- தஞ்சைக்கு ரயில் பாதை: பயணிகள் எதிா்பாா்ப்பு

image

நூற்றாண்டுப் பழமையான யோசனையாகக் கருதப்படும் புதுக்கோட்டை- தஞ்சையை இணைக்கும் புதிய ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என ரயில் பயணிகள் ஆவலுடன் எதிா்பாா்க்கின்றனா்.
திருச்சி- புதுக்கோட்டை ரயில் தடம் கடந்த 1927ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே தஞ்சை புதுக்கோட்டையை இணைக்கும் ரயில் தடம் அமைப்பதுதான் திட்டமாக இருந்திருக்கிறது.

News July 22, 2024

அமமுக சார்பில் மின் கட்டண போராட்டம்

image

புதுக்கோட்டை திலகர் திடலில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசு நிர்வாகத்தின் தோல்விகளை மறைக்க மின்கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சொத்து வரி உயர்வு போன்ற கட்டணங்களை உயர்த்தி மக்கள் மீது சுமைகளை திணிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

News July 22, 2024

அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வர்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(ஜூலை 22) காலை 10 மணி அளவில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை பாலா நகர் பகுதியில் ரூ.23.57 கோடி மதிப்பீடு கட்டப்பட்டுள்ள 256 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா மற்றும் மேயர் செந்தில் திலகவதி கலந்து கொண்டனர்.

News July 22, 2024

புதுக்கோட்டை அருகே 1008 விளக்கு பூஜை

image

புதுக்கோட்டை மாவட்டம் உட்காட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது முத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலில் நேற்று(ஜூலை 21) கணபதி ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் தொடங்கிய குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் பலர் கலந்து கொண்டு 1,008 குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News July 22, 2024

அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

image

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பூவாசகுடி செந்தலை அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் குதிரை எடுப்பு விழா மற்றும் கிடா வெட்டு பூஜை நேற்று நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு மேளதாளம் முழங்க குதிரை சிலைகளை எடுத்து வந்தனர். பின்னர் கிடா வெட்டி பூஜை நடைபெற்றது. இரவு அய்யனார் பூரண புஷ்கலை, விநாயகர், பெரிய கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது.

error: Content is protected !!