India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில், இஸ்லாமிய பெண்களுக்கு சிறுதொழில் தொடங்கும் வகையில் நிதி உதவித்தொகைக்கான காசோலைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் (பொ) தாஸூகி ஆர்.ரம்யாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலம்பட்டியை சேர்ந்தவர் சிவந்தி (29). இவரது மகன் ஸ்ரீதரன் (4). இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் இலுப்பூர் புறவழிச்சாலையில் சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, தந்தை, மகன் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழக்குறிச்சியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்தவர் செல்வராஜூ. இவர், தனது உறவினர் இறந்த நிலையில், 16ஆம் நாள் காரியத்திற்காக விராலிமலை சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 சிறுமிகளுக்கு செல்வராஜ் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிறுமிகளின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், இலுப்பூர் மகளீர் போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி கரம்பக்குடி ஊராட்சி மருதகோன் விடுதியிலும், விராலிமலை ஒன்றியத்தில் விளாப்பட்டி கிராமத்திலும், அன்னவாசல் ஒன்றியத்தில் முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்திலும் நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றறிக்கை விடுத்துள்ளார். இதில், வேற்று மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலை வைக்க கூடாது. விநாயகர் சிலைகளை சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை கொண்டுசெய்யக் கூடாது. பிறமதத்திற்கு எதிராக முழக்கமிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு போக்குவரத்து கழக புதுகை மண்டல அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி செயல் திறன் மிக்க ஓட்நனர், நடத்துனர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ‘புதுகை மண்டலத்தில் முதல்வரின் விடியல் பயணம் தினசரி சராசரியாக 1.02 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் புதுகை மண்டலம் ரூ 14.27 கோடி வருவாய் ஈட்டியுள்ளது” என்றார் பொன்முடி.
தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பி ஆக இருந்த பால்ராஜ் திண்டுக்கல் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பியாக இருந்த செந்தில் இளைஞரணி மதுரை சிவில் சப்ளை டிஎஸ்பி ஆகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 1ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் நேற்று இரவு சென்னைக்கு விமான நிலையம் வந்து அங்கிருந்து பேருந்து மூலம் புதுக்கோட்டைக்கு வந்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் செய்யவும்
புதுக்கோட்டை ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் திருநெல்வேலி – பட்னா சிறப்பு ரயிலில் உள்ள முன்பதிவுகளை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவித்துள்ளனர். இந்த ரயிலானது இன்று இரவு இரவு 09:45 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த செய்தியை திருநெல்வேலியில் வசிக்கும் புதுக்கோட்டை மக்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
புதுக்கோட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவரும், திருச்சி காங்கிரஸ் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இல்ல திருமண விழாவை முன்னிட்டு டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியை சந்தித்து தனது இல்ல திருமண அழைப்பிதழை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.