India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தனியார் மருத்துவமனை மற்றும் அன்னவாசல் ஜமாத் இணைந்து சமயநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தும் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நாளை 30-01-2025 வியாழக்கிழமை JK திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி,அரசர்குளம், சுப்ரமணியபுரம், திருவாப்பாடி விராலிப்பட்டி உள்ளிட்ட பிற துணை மின் நிலையங்களில் நாளை(ஜன.30) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, இன்று காலை 10.15 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், வல்லநாடு மற்றும் மலையூர் ஆகிய இடங்களில், புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்களை திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடு பணிகள் நடந்து முடிந்தது.

விராலிமலை தாலுகா பெரிச்சிப்பட்டியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (60). இவர் பெரிச்சிப்பட்டி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அய்யாக்கண்ணு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 155 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து இதுவரை கொள்முதல் செய்த நெல்லுக்கு உண்டான தொகையான ரூ. 5 கோடியே 43 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

திருமயம் அருகே கல்குவாரிகளில் முறைகேடு நடப்பது தொடர்பாக புகார் தெரிவித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதுகை மாவட்டத்தின் நிர்வாக நலன் கருதி திருமயம் தாசில்தார் உட்பட 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஆட்சியர் அருணா நேற்று உத்தரவிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமயம் அருகே ஜகபர் அலி கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏற்கனவே திருமயம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது தாசில்தார் புவியரசன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமயத்தில் புதிய தாசில்தாராக ஆலங்குடி தனி வட்டாட்சியர் ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை அரசு ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்குகிறது. பின்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பிப்.19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை குடும்ப அட்டையுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

விராலிமலையை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் டூ படித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோடை விடுமுறையின் போது சிறுமியின் அத்தை மகன் சுந்தரமூர்த்தி (36), சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் நேற்று கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுந்தரமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விராலிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட MK மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவராக பணிபுரியும் பிரகாஷ் (37). இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி நிஷா (36) அளித்த புகாரின் அடிப்படையில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.