India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை உட்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா முன்னிலையில் நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யா தேவி, அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி இன்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் 5 பேரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசுப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் ரெகுநாதபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக புதிய காவல் நிலைய கட்டிடத்தினை இன்று (01/08/24) திறந்து வைத்தார். திறப்பு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி 3 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். அதன்படி அரிமளம், மணமேல்குடி மற்றும் அன்னவாசல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நாளை மக்களுடன் முதலவர் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் சம்பத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளில் கத்திரிக்காய் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கத்திரிக்காய் விளைச்சல் பாதிப்பால் அதன் வரத்து குறைந்து விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை உழவர் சந்தையில் கிலோவுக்கு ரூ.60-க்கு விற்பனையான கத்திரிக்காய் நேற்று கடுமையாக விலை உயர்ந்து கத்திரிக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்ந்த பணிகளின் முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளியே செல்லுவோர் முன்னெச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் 7வது புத்தக திருவிழாவின் 5ஆம் நாளான இன்று பள்ளி மாணவர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். பின்னர், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். மேலும் புத்தக திருவிழாவில் நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களின் கூட்டம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்துக்களை commentsல் பதிவிடவும்.
Sorry, no posts matched your criteria.