India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை நகரப் பகுதியில் மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது குறிப்பாக புதுக்கோட்டை அண்ணா சிலை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழையில் இரு சக்கர வாகனத்தில் பலர் நனைந்து சென்றனர். மேலும் சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண்கள் கொட்டும் மழை நனைந்தபடியே பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் திமுக நிர்வாகிகளை சந்தித்தார். புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் தினந்தோறும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் இன்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அறந்தாங்கி வட்டம், அழியாநிலை வருவாய் கிராமத்தில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்துவரும் குடும்பங்களுக்கு, புதிய வீடுகள் கட்டுவதற்கான இடத்தினை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் திரு. ச. சிவக்குமார், மற்றும் பலர் உள்ளனர
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற துப்பாக்கி சூடும் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பழனிவேல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்ற ஸ்வப்னில் குசேலா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமை புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞருமான கே.கே.செல்ல பாண்டியன் மக்களுடன் முதல்வர் முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய கழக செயலாளர் கே.ஆர்.என் போஸ் சண்முகம் மாவட்ட கவுன்சிலர் செல்வம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு திமுக வட்டக் கழக செயலாளர் பிரேம் ஆனந்த் அந்தப் பகுதியில் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை உடனடியாக செய்து கொடுத்து வருகிறார். மேலும் அவருடைய மனைவி காந்திமதி அந்த பகுதியின் மாமன்ற உறுப்பினராக இருப்பதால் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அந்த பகுதியில் தண்ணீர் டேங்கில் பழுது ஏற்பட்டதை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து சீர் செய்தார்.
புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தில் அம்ரித் திட்டத்தின் கீழ் தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கீழிருந்து மேலே உள்ள நடைபாதைக்கு முதியோர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் செல்வதற்காக லிப்ட் அமைக்கப்பட்டு வந்தது. அந்த லிப்ட் அமைக்கும் பணி தற்போது முடிந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறந்தாங்கி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டத்தை பார்வையிட்டு, மிகுந்த முயற்சியுடன் தோட்டத்தை உருவாக்கி பராமரித்து வரும் கல்லூரியின் முதல்வர் குமாரை வெகுவாக பாராட்டினார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகர் பகுதி பிருந்தாவனம், மச்சுவாடி, திருக்கோகர்ணம், மேட்டுப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்றைய தினம் இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு 7.9 மிமீ ஆக பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13,03,130 பேருக்கு நோய் தொற்றா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4,39,455 நபர்களுக்கு தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மக்களை தேடியும் மருத்துவம் சிறப்பாக செயல்படுகிறது எனவும், மேலும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.