India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வேப்பங்குடி ஊராட்சி இம்மனாம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுடன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா அப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர், மாணவிகள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை, குளத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முரசொலியில் தொடர்ந்து கவிதைகளை எழுதி வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிச்சுடர் கவிதை பித்தனுக்கு, கவிஞர் வைரமுத்து புகழாரம். சென்னையில் நேற்று நடைபெற்ற கலைஞரின் நூறு கவிதைகள் நூறு நூல் வெளியிட்டு விழாவில் நம்மிடம் ஒரே ஒரு கவிஞர் மட்டுமே மிச்சம் இருக்கிறார், அவரை கொண்டாட வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.
புதுக்கோட்டையில் நாளை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் நடைபெற உள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் 660.20 மிமீ மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதில் பெருங்களூரில் 76 மிமீ, ஆலங்குடியில் 38 மிமீ, திருமயத்தில் 65 மிமீ, நாகுடியில் 46 மிமீ, ஆவுடையார் கோவிலில் 42 மிமீ, புதுக்கோட்டையில் 40 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் சராசரியாக மாவட்ட முழுவதும் 27.51 மிமீ மழை பெய்துள்ளது.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார். இதில் திருக்கட்டளை, மகனாம்பட்டி, திருவரங்குளம், கே.வி கோட்டை, அரசடிப்பட்டி, பாதம்பட்டி, அறையப்பட்டி ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா, ஒன்றிய அலுவலகம் கட்டும் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா விருதுகளை பெறுவதற்கு வரும் 20ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு 7397775682 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஷேர் செய்யவும்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் அதிகளவில் மகப்பேறு சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகப்பேறு சிகிச்சைகள் செய்வதற்கு வரும் பெண்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே தங்கும் இடத்தில் தங்கிக் கொள்வார்கள். இன்று பலத்த மழை பெய்ததால் நோயாளிகளின் உறவினர்கள் தங்கம் இடங்களில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
புதுக்கோட்டை நகர் பகுதியில் பகல் நேங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று (ஆக07) மாலை பிருந்தவானம், திலகர்திடல், திருக்கோகரணம், மேட்டுப்பட்டி, மச்சுவாடி போன்ற சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன கூடிய கனமழை பெய்தது. இந்த மழையினால் சாலையில் மழைநீர் ஆறு போல் ஓடியது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா இன்று நடைபெற்றது. ஆலங்குடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பெண்கள் அலங்காிக்கப்பட்ட மதுகுடங்களை ஊா்வலமாக எடுத்துவந்தனா். கோவிலை அடைந்தபின் எடுத்துவந்த மதுகுடங்களை சுவாமிக்கு வைத்து வழிபட்டனா். சுவாமி நாடியம்மனுக்கு மஹா தீபாதரனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதுஎடுப்பு திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் இருக்கும் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு முதல் ஆளாக சென்று முதல் மாலையை அணிவித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர்கவிதைப் பித்தன் கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
Sorry, no posts matched your criteria.