Pondicherry

News March 28, 2025

பள்ளிக்கல்வித்துறையில் 114 பேர் இடமாற்றம்

image

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநர் வெர்பினா ஜெயராஜ் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் தலைமை ஆசிரியர்கள் (கிரேடு-1) குணசுந்தரி உறுவையாறு அரசு உயர்நிலைப் பள்ளியிலிருந்து கொம்பாக்கம் பள்ளிக்கும், அரிவரதன் காரைக்கால் டி.ஆர்.பட்டினம் அரசு பெண்கள் பள்ளியிலிருந்து, மடுகரை வி.எஸ்.ஆர். பெண்கள் பள்ளிக்கும் மேலும் தலைமை ஆசிரியர்கள் (கிரேடு-2) உள்ளிட்ட 111 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 27, 2025

புதுவையில் ராஜராஜ சோழன் கட்டிய கோயில் தெரியுமா?

image

புதுவை மதகடிப்பட்டில் குண்டாங்குழி எனும் குளக்கரையில் அமைந்ததுள்ளதால் இங்குள்ள மூலவர் குண்டாங்குழி மகாதேவர் என அழைக்கப்படுகிறார். அழகான கற்றளியாக விளங்கும் இக்கோயில் கி.பி. 985-இலிருந்து 1016 வரை ஆட்சி செய்த முதலாம் ராசராசனால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. இங்கு முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ அரசர்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. SHARE செய்யவும்

News March 27, 2025

புதுவை ஆரோவில்லில் ஐஐடி கேம்பஸ்

image

புதுவை ஆரோவில்லில் ஐஐடி மெட்ராஸ் தனது 4வது கேம்பஸை இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளதாக அதன் இயக்குநர் காமக்கோடி அறிவித்துள்ளார். ஆரோவில்லில் 20 ஏக்கர் பரப்பளவில் மின்சார வாகனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த பூஜ்ஜிய-உமிழ்வு சோதனை மையம் அமைக்கப்படும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

News March 27, 2025

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, தீர்மானம் நிறைவேற்றம்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மாநில அந்தஸ்து தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏ-க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், வைத்தியநாதன், நாக தியாகராஜன், நேரு(எ)குப்புசாமி ஆகியோர் கொண்டுவந்த தீர்மானம் அரசின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுக்கொள்ளாத நிலையில் இன்று 16வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News March 27, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

image

தவளக்குப்பம் அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (42), தொழிலாளி. இவா் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தவளக்குப்பம் போலீஸாா், சுரேஷை கைது செய்தனா். அவா் மீதான வழக்கு விசாரணை, புதுவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், சுரேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.10000 அபராதம் விதித்தும் நீதிபதி சுமதி உத்தரவிட்டாா்.

News March 26, 2025

காரைக்காலில் 2000 ஆண்டு பழமையான கோயில்!

image

காரைக்காலில் கைலாசநாதர் கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இங்குள்ள மூலவர் கைலாசநாதர், தாயார் செளந்தாராம்பாள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த கோயில் அம்மையார் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் புனரமைக்கப்பட்டு மீண்டும் பிரெஞ்ச் ஆட்சி காலத்திலும் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் பற்றி உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் செய்யவும்

News March 26, 2025

புதுவை கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்

image

புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தி வருகிறது. மேலும் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தெரிவித்தார்.

News March 26, 2025

அரசு பள்ளிகளில் சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர்

image

சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், புதுவை நகரப்பகுதியில் – 2, கிராமப்புறங்களில் – 2 , காரைக்காலில் – 1 என நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும். அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து மாணவர்கள் கல்வி திறன், ஆசிரியர்கள் திறன் அதிகரிக்கப்படும். அரசு பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும், என்றார்.

News March 26, 2025

புதுவையில் முதலீட்டாளர்கள் மாநாடு – அமைச்சர் அறிவிப்பு

image

புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் இந்தாண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விளக்குகளும் LED விளக்குகளாக மாற்றப்படும். மின்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.

News March 26, 2025

புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

image

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுவையில் உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் மற்றும் புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்” என தெரிவித்தார்.

error: Content is protected !!